சென்னை: தமிழ்நாட்டில் இன்று பிறை தென்படாத காரணத்தால், ரம்ஜான் பண்டிகை, வியாழக்கிழமை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜியார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மார்ச் 12ம் தேதி ரமலான் நோன்பு தொடங்கியது. இந்த நிலையில் நாளை ரம்ஜான் பண்டிகை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று பிறை தென்படவில்லை. இதையடுத்து ரம்ஜான் பண்டிகை ஏப்ரல் 11ம் தேதி வியாழக்கிழமையன்று கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைக் காஜியார் சலாஹுதீன் முகம்மது அயூப் அறிவித்துள்ளார்.

பிறை எப்போது தென்படும் என்ற எதிர்பார்ப்பிலும், ஆ்வலிலும் இன்று பலரும் காத்திருந்தனர். இருப்பினும் இன்று பிறை தென்படவில்லை என்பதால் பண்டிகை ஒரு நாள் தள்ளிப் போயுள்ளது.
இதற்கிடையே சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தானில் இன்று பிறை தென்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கெல்லாம் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. வழக்கமாக சவூதியில் ரம்ஜான் கொண்டாடப்படும் சமயத்தில்தான் கேரளாவிலும் தமிழ்நாட்டின் கோவையிலும் ரம்ஜான் கொண்டாடப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைப் போலவே, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இன்று பிறை தென்படவில்லை. இதனால் அங்கும் 11ம் தேதிதான் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}