ஹைதராபாத்: புஷ்பா 2 படத்தில் இடம் பெற்றுள்ள பாடலின் நடன மூவ்மென்ட்டை நடிகர் ஆனந்த் தேவரகொண்டாவுக்கு க்யூட்டாக நடிகை ராஷ்மிகா மந்தனா கற்றுத் தரும் வீடியோ கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
புஷ்பா படத்தின் 2வது பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலை ஏற்கனவே வெளியிட்டு விட்டனர். 2வது சிங்கிள் இன்று முற்பகல் வெளியாகவுள்ளது. இந்தப் பாடலை ஷ்ரேயா கோஷல் பாடியுள்ளார். கிட்டத்தட்ட முதல் பாகத்தில் இடம் பெற்ற சாமி ஓ சாமி பாடலைப் போல இதுவும் பட்டையைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவின் தம்பியும், நடிகருமான ஆனந்த் தேவரகொண்டாவுடன் இணைந்து ராஷ்மிகா கம் கம் கணேஷா என்ற படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்டபோது புஷ்பா 2 படத்தில் இடம் பெற்ற சூசேகி பாடல் குறித்து கூறப்பட்டது. அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த ராஷ்மிகா அடுத்த செய்ததுதான் வைரலாகியுள்ளது.
அதாவது காம்பியர் இதுகுறித்துக் கூறியதைக் கேட்டு புன்னகைத்த ராஷ்மிகா, அதே வேகத்தில் ஆனந்த் தேவரகொண்டா பக்கம் திரும்பினார். அவரிடம் சூசேகி குறித்து தெரியுமா என்று கேட்ட அவர், அவருக்கு சைகையிலேயே அந்தப் பாடல் குறித்து விளக்கி மூவ்மென்ட்டையும் விளக்கினா சொல்லிக் கொடுத்தார். அவர் சொல்லச் சொல்ல அதைச் செய்து காட்டினார் ஆனந்த் தேவரகொண்டா.
இருவரும் இப்படி சைகையிலேயே பேசிக் கொண்டது செம க்யூட்டாக இருந்தது. இந்த வீடியோ இப்போது வைரலாகப் பரவி வருகிறது. ராஷ்மிகா என்ன செஞ்சாலும் வைரலாகி விடுகிறது!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}