சென்னை: காதல் வேடங்களிலும், கலகலப்பான பாத்திரங்களிலும், அழுத்தமான நடிப்பிலும் அசத்தியுள்ள ராஷ்மிகா மந்தனாவை மையமாக வைத்து ஒரு புதிய படம் உருவாகிறது.
கீதா ஆர்ட்ஸ், மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்க, இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்பத்திற்கு தி கேர்ள்ஃபிரண்ட் என பெயரிட்டஉள்ளனர்.
தெலுங்கு, தமிழ் படங்களில் ஏராளமாக நடித்துப் புகழ் பெற்றவர் ராஷ்மிகா. தெலுங்கில் இவர் நடித்த புஷ்பா மிகப் பெரிய பிளாக்பஸ்டர் ஆனது. தமிழில் வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்திருந்தார். தற்போது இந்தியிலும் புகுந்திருக்கிறார் ராஷ்மிகா. இவர்தான் தி கேர்ள் பிரண்ட் படத்தின் நாயகியாக நடிக்கவுள்ளார். இவரை சுற்றித்தான் கதை புனையப்பட்டுள்ளது. அதாவது ஹீரோயின் ஓரியன்டட் படமாக இது உருவாகிறது.

ஹீரோயின் சம்பந்தப்பட்ட படமாக இருந்தாலும் கூட அனைத்து வயதினரும் என்ஜாய் செய்து இப்படத்தைப் பார்க்க முடியும் முடியும் என்று படக் குழு நம்பிக்கையுடன் சொல்கிறது. தனது காதலியிடம் எதிர்பார்க்கும் உரையாடல்களை அழுத்தமாக கொண்டிருக்கும் இந்த அழுத்தமான படைப்பில் தனது ரசிகர்களை அசத்தவுள்ளார் ராஷ்மிகா. இதில் அவரது தோற்றம் அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
தேசிய நாயகியாகியுள்ள ராஷ்மிகாவின் வித்தியாசமான நடிப்பில் வரும் தி கேர்ள் பிரண்ட் அனைவரையும் வசீகரிப்பார் என்று நம்பலாம்!
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}