வடையில் பருப்பு இருக்கலாம்.. ஆனால் எலி இருக்கலாமோ??.. பாபு டீக்கடைக்கு சீல் வைத்த நகராட்சி!

Aug 30, 2024,05:02 PM IST

கரூர்: டீக்கடையில் வாங்கிய பருப்பு வடையில் எலி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த டீக்கடைக்கு சீல் வைத்தது கரூர் நகராட்சி நிர்வாகம்.


கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோயில் அருகே பாபு டீக்கடை கடந்த 5 வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த டீக்கடையில் ஒருவர் வாங்கிய பருப்பு வடையில் எலி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வடையை சாப்பிட்டவர் வடையில் எலி உள்ளது. அதனை விற்கவேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதனை கேட்ட டீக்கடைக்காரர் பாபு சின்ன எலிதானே தூக்கிப் போட்டு போங்க பாஸ்.. ஒன்றும் செய்யாது என அலட்சியமாக வடிவேலு பட பாணியில் பதிலளித்துள்ளார். 




இந்த நிலையில், எலி இருந்த வடையை சாப்பிட்ட எலக்ட்ரீசியன் கார்த்தி என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். எலி இருந்த வடையை சாப்பிட்டவர் பாதிக்கப்பட்டதால் நகராட்சி நிர்வாகத்தினர் கடைக்கு சீல் வைத்தனர். கடையில் இருந்த வடைகள் அனைத்தையும் நகராட்சி வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றனர் ஊழியர்கள். 


சமீப காலமாகவே உணவு பொருட்களில் பள்ளி, கரப்பான் பூச்சி உள்ளிட்ட உயிரினங்கள் உணவுப் பொருட்களில் இருப்பது அதிகரித்து வருகிறது. இவற்றினால் வாடிக்கையாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிரியாணியில் கண்ணாடித் துண்டு கிடந்தது நெல்லையில் பரபரப்பை ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கு அதிக அளவில் நடக்கின்றன. இதனை தட்டி கேட்டாலும் உரிமையாளர்களிடம் இருந்து சரியான விளக்கம் கிடைப்பதில்லை. இது குறித்து சுகாதாரத்துறை, உணவுப் பாதுகாப்புத்துறை எத்தகைய நடவடிக்கை எடுத்து வந்தாலும். அந்த சம்பவங்கள் தொடர்ந்து அடிக்கடி நிகழ்ந்து தான் வருகின்றன.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்