வடையில் பருப்பு இருக்கலாம்.. ஆனால் எலி இருக்கலாமோ??.. பாபு டீக்கடைக்கு சீல் வைத்த நகராட்சி!

Aug 30, 2024,05:02 PM IST

கரூர்: டீக்கடையில் வாங்கிய பருப்பு வடையில் எலி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த டீக்கடைக்கு சீல் வைத்தது கரூர் நகராட்சி நிர்வாகம்.


கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோயில் அருகே பாபு டீக்கடை கடந்த 5 வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த டீக்கடையில் ஒருவர் வாங்கிய பருப்பு வடையில் எலி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வடையை சாப்பிட்டவர் வடையில் எலி உள்ளது. அதனை விற்கவேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதனை கேட்ட டீக்கடைக்காரர் பாபு சின்ன எலிதானே தூக்கிப் போட்டு போங்க பாஸ்.. ஒன்றும் செய்யாது என அலட்சியமாக வடிவேலு பட பாணியில் பதிலளித்துள்ளார். 




இந்த நிலையில், எலி இருந்த வடையை சாப்பிட்ட எலக்ட்ரீசியன் கார்த்தி என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். எலி இருந்த வடையை சாப்பிட்டவர் பாதிக்கப்பட்டதால் நகராட்சி நிர்வாகத்தினர் கடைக்கு சீல் வைத்தனர். கடையில் இருந்த வடைகள் அனைத்தையும் நகராட்சி வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றனர் ஊழியர்கள். 


சமீப காலமாகவே உணவு பொருட்களில் பள்ளி, கரப்பான் பூச்சி உள்ளிட்ட உயிரினங்கள் உணவுப் பொருட்களில் இருப்பது அதிகரித்து வருகிறது. இவற்றினால் வாடிக்கையாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிரியாணியில் கண்ணாடித் துண்டு கிடந்தது நெல்லையில் பரபரப்பை ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கு அதிக அளவில் நடக்கின்றன. இதனை தட்டி கேட்டாலும் உரிமையாளர்களிடம் இருந்து சரியான விளக்கம் கிடைப்பதில்லை. இது குறித்து சுகாதாரத்துறை, உணவுப் பாதுகாப்புத்துறை எத்தகைய நடவடிக்கை எடுத்து வந்தாலும். அந்த சம்பவங்கள் தொடர்ந்து அடிக்கடி நிகழ்ந்து தான் வருகின்றன.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அழகு மயில்!

news

என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)

news

மதியொளி முகமோ!

news

குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்