கரூர்: டீக்கடையில் வாங்கிய பருப்பு வடையில் எலி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த டீக்கடைக்கு சீல் வைத்தது கரூர் நகராட்சி நிர்வாகம்.
கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோயில் அருகே பாபு டீக்கடை கடந்த 5 வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த டீக்கடையில் ஒருவர் வாங்கிய பருப்பு வடையில் எலி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வடையை சாப்பிட்டவர் வடையில் எலி உள்ளது. அதனை விற்கவேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதனை கேட்ட டீக்கடைக்காரர் பாபு சின்ன எலிதானே தூக்கிப் போட்டு போங்க பாஸ்.. ஒன்றும் செய்யாது என அலட்சியமாக வடிவேலு பட பாணியில் பதிலளித்துள்ளார்.

இந்த நிலையில், எலி இருந்த வடையை சாப்பிட்ட எலக்ட்ரீசியன் கார்த்தி என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். எலி இருந்த வடையை சாப்பிட்டவர் பாதிக்கப்பட்டதால் நகராட்சி நிர்வாகத்தினர் கடைக்கு சீல் வைத்தனர். கடையில் இருந்த வடைகள் அனைத்தையும் நகராட்சி வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றனர் ஊழியர்கள்.
சமீப காலமாகவே உணவு பொருட்களில் பள்ளி, கரப்பான் பூச்சி உள்ளிட்ட உயிரினங்கள் உணவுப் பொருட்களில் இருப்பது அதிகரித்து வருகிறது. இவற்றினால் வாடிக்கையாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிரியாணியில் கண்ணாடித் துண்டு கிடந்தது நெல்லையில் பரபரப்பை ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கு அதிக அளவில் நடக்கின்றன. இதனை தட்டி கேட்டாலும் உரிமையாளர்களிடம் இருந்து சரியான விளக்கம் கிடைப்பதில்லை. இது குறித்து சுகாதாரத்துறை, உணவுப் பாதுகாப்புத்துறை எத்தகைய நடவடிக்கை எடுத்து வந்தாலும். அந்த சம்பவங்கள் தொடர்ந்து அடிக்கடி நிகழ்ந்து தான் வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}