வடையில் பருப்பு இருக்கலாம்.. ஆனால் எலி இருக்கலாமோ??.. பாபு டீக்கடைக்கு சீல் வைத்த நகராட்சி!

Aug 30, 2024,05:02 PM IST

கரூர்: டீக்கடையில் வாங்கிய பருப்பு வடையில் எலி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த டீக்கடைக்கு சீல் வைத்தது கரூர் நகராட்சி நிர்வாகம்.


கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோயில் அருகே பாபு டீக்கடை கடந்த 5 வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த டீக்கடையில் ஒருவர் வாங்கிய பருப்பு வடையில் எலி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வடையை சாப்பிட்டவர் வடையில் எலி உள்ளது. அதனை விற்கவேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதனை கேட்ட டீக்கடைக்காரர் பாபு சின்ன எலிதானே தூக்கிப் போட்டு போங்க பாஸ்.. ஒன்றும் செய்யாது என அலட்சியமாக வடிவேலு பட பாணியில் பதிலளித்துள்ளார். 




இந்த நிலையில், எலி இருந்த வடையை சாப்பிட்ட எலக்ட்ரீசியன் கார்த்தி என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். எலி இருந்த வடையை சாப்பிட்டவர் பாதிக்கப்பட்டதால் நகராட்சி நிர்வாகத்தினர் கடைக்கு சீல் வைத்தனர். கடையில் இருந்த வடைகள் அனைத்தையும் நகராட்சி வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றனர் ஊழியர்கள். 


சமீப காலமாகவே உணவு பொருட்களில் பள்ளி, கரப்பான் பூச்சி உள்ளிட்ட உயிரினங்கள் உணவுப் பொருட்களில் இருப்பது அதிகரித்து வருகிறது. இவற்றினால் வாடிக்கையாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிரியாணியில் கண்ணாடித் துண்டு கிடந்தது நெல்லையில் பரபரப்பை ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கு அதிக அளவில் நடக்கின்றன. இதனை தட்டி கேட்டாலும் உரிமையாளர்களிடம் இருந்து சரியான விளக்கம் கிடைப்பதில்லை. இது குறித்து சுகாதாரத்துறை, உணவுப் பாதுகாப்புத்துறை எத்தகைய நடவடிக்கை எடுத்து வந்தாலும். அந்த சம்பவங்கள் தொடர்ந்து அடிக்கடி நிகழ்ந்து தான் வருகின்றன.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்