தமிழ்நாடு ரேஷன் கடை பணிகளுக்கான காலி பணியிட அறிவிப்பு வந்தாச்சு.. விண்ணப்பிச்சுட்டீங்களா!

Oct 18, 2024,04:59 PM IST

சென்னை :  தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களில், அதாவது ரேஷன் கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் பணிகளுக்கு சுமார் 3280 பணியிடங்கள் காலியாக உள்ளதாக மாவட்ட வாரியாக காலியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.


இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு கிடையாது. நேர் காணல் மட்டும் தான். இந்த நேர்காணலும் விண்ணப்பதாரர் குறித்த விபரங்களை அறிந்து கொள்வதற்கானதாகவே இருக்கும். இந்த பணிகளுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாவட்ட ஆட்சேர்ப்பு வாரியங்கள் வழியாக தான் தமிழ்நாடு அரசு இந்த மாவட்ட வாரியாக காலி பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பொதுவான இணையதளம் கிடையாது. மாவட்ட வாரியான இணையதளங்கள் வழியாக மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.




https://www.drbchn.in/ என்ற இணையதளத்திற்கு சென்று அவரவர்களின் மாவட்டங்களை தேர்வு செய்து, அந்த பக்கத்திற்கு சென்று விண்ணப்பங்களை பதிவிட வேண்டும். அல்லது district recruitment bureau என கூகுளில் டைப் செய்து, அதற்கு பக்கத்தில் விண்ணப்பதாரர் சார்ந்த மாவட்டத்தை டைப் செய்து தேடினால் நேரடியாக அந்தந்த மாவட்டத்தின் பக்கத்திற்கு செல்லும். அங்கு சென்று விண்ணப்பிக்கலாம். சென்னையை சேர்ந்தவர்கள் https://www.drbchn.in/ என்ற இணையதளத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். சென்னையில் மட்டும் 138 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் அக்டோபர் 09ம் தேதியே துவங்கி விட்டது. நவம்பர் 07ம் தேதி தான் விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதியாகும். விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்துடன் 50 கேபி அளவிலான பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, 50 கேபி அளவிலான கையெழுத்து, 200 கேபி அளவிலான சாதி சான்றிதழ், 200 கேபி அளவிலான கல்வி சான்றிதழ், 200 கேபி அளவிலான குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?

news

ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு

news

Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

news

குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்

news

Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்

news

சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு

news

ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

news

"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!

news

சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்