தமிழ்நாடு ரேஷன் கடை பணிகளுக்கான காலி பணியிட அறிவிப்பு வந்தாச்சு.. விண்ணப்பிச்சுட்டீங்களா!

Oct 18, 2024,04:59 PM IST

சென்னை :  தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களில், அதாவது ரேஷன் கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் பணிகளுக்கு சுமார் 3280 பணியிடங்கள் காலியாக உள்ளதாக மாவட்ட வாரியாக காலியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.


இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு கிடையாது. நேர் காணல் மட்டும் தான். இந்த நேர்காணலும் விண்ணப்பதாரர் குறித்த விபரங்களை அறிந்து கொள்வதற்கானதாகவே இருக்கும். இந்த பணிகளுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாவட்ட ஆட்சேர்ப்பு வாரியங்கள் வழியாக தான் தமிழ்நாடு அரசு இந்த மாவட்ட வாரியாக காலி பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பொதுவான இணையதளம் கிடையாது. மாவட்ட வாரியான இணையதளங்கள் வழியாக மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.




https://www.drbchn.in/ என்ற இணையதளத்திற்கு சென்று அவரவர்களின் மாவட்டங்களை தேர்வு செய்து, அந்த பக்கத்திற்கு சென்று விண்ணப்பங்களை பதிவிட வேண்டும். அல்லது district recruitment bureau என கூகுளில் டைப் செய்து, அதற்கு பக்கத்தில் விண்ணப்பதாரர் சார்ந்த மாவட்டத்தை டைப் செய்து தேடினால் நேரடியாக அந்தந்த மாவட்டத்தின் பக்கத்திற்கு செல்லும். அங்கு சென்று விண்ணப்பிக்கலாம். சென்னையை சேர்ந்தவர்கள் https://www.drbchn.in/ என்ற இணையதளத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். சென்னையில் மட்டும் 138 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் அக்டோபர் 09ம் தேதியே துவங்கி விட்டது. நவம்பர் 07ம் தேதி தான் விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதியாகும். விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்துடன் 50 கேபி அளவிலான பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, 50 கேபி அளவிலான கையெழுத்து, 200 கேபி அளவிலான சாதி சான்றிதழ், 200 கேபி அளவிலான கல்வி சான்றிதழ், 200 கேபி அளவிலான குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Imposter Syndrome என்றால் என்ன.. இது யாருக்கெல்லாம் வரும்.. எப்படி சரி செய்வது?

news

ஆதவ் அர்ஜூனா அழைப்பு.. குழப்பத்தில் கட்சிகள்.. வேலுமணி தரப்புக்கு பதவி உண்டா?

news

மண்டையைப் பிளக்கும் கோடை வெயில்.. எல் நினோ தாக்கத்தால் அதிகரிக்கும் இரவு நேர வெப்பம்!

news

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக புதிய தேர்த் திருவிழா

news

10ம் வகுப்பில் தோல்வியா.. கவலை வேண்டாம்.. ஜூன் மாதம் துணைத் தேர்வு எழுதலாம்

news

10ம் வகுப்பு தேர்வில்.. அதிக தேர்ச்சியில் புதுக்கோட்டை.. அரசுப் பள்ளிகளில் சிவகங்கை முதலிடம்!

news

10ம் வகுப்பு தேர்வு: பாடவாரியாக சென்டம் போட்ட தங்கங்கள்.. தமிழில் 34 பேர்.. அறிவியல் டாப்!

news

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. சென்டம் போட்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1931

news

The Golden Bloom of a Melody.. கேட்கும்போதெல்லாம் மயக்கும் மாயாஜாலம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்