- க.யாஸ்மின் சிராஜூதீன்
ஆசிரியர் இன்றி அமையுமா கல்வி?
வேரின்றி நிற்குமா மரம்
ஆசிரியர் இன்றி தழைக்குமா கல்வி
அறிவொளி ஏற்றும் தீபம் ஆசானே
குன்றின் மேலிட்ட விளக்கு என்பதில் பெருமையே....
உணர்வுக்கு உயிரளித்து
பொருள் புரிய வைக்கும் அழகே சிறப்பம்சமே...
அறிவொளி தேடும் பயணத்தில்
உருகும் மெழுகும் ஆசானே

ஊடகவழிக்கல்வி வெறும் செய்தி திணிப்பே....
கற்கண்டு கல்வியை
கசப்பு மருந்தாக தர முயல்வதேனோ...
ஆகச்சிறந்த கல்வி ஆசிரியராலே...
ஆக்கம் இல்லாத கல்வி ஆசிரியர் இல்லாததாலே...
விஞ்ஞான யுகத்தில் ஆசிரியர் தேவையா?
இதுவே இன்றைய முக்கிய கேள்வியா?
சரிதான் விடையை காலம் தன் கையில் ஏந்தட்டும்..
ஆசிரியர்களின் அறப்பணி தொடரட்டும்...
மாணவர்களின் தரம் உயரட்டும்...!!!!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?
முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?
இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இசைஞானி என்னும் இசைத்தோணி!
Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)
பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்
இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து
கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு
தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!
{{comments.comment}}