சென்னை: தீபாவளி பண்டிகை, நவம்பர் 12ம் தேதி வருவதை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக நவம்பர் 5ம் தேதி ஞாயிறு அன்று ரேசன் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த வருடம் தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஆதலால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் உணவுத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், வரும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி தின விடுமுறையினை முன்னிட்டு, அதற்கு முன்னதாக பொதுமக்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் கிடைக்க வேண்டும். இதனை முன்னிட்டு, வரும் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் திறந்து இருக்கும்.

அதனால் தங்கள் கடைகளில் உள்ள அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை , உள்ளிட்ட பொருட்களை தேவையான அளவு இருப்பை ரேஷன் ஊழியர்கள் சரிபார்த்து கொள்ள வேண்டும். நவம்பர் 5ம் ஞாயிற்றுக்கிழமை வேலை நாளை ஈடுகட்டும் பொருட்டு, அடுத்து ஏதேனும் ஒரு நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்படும். அதற்கான அறிவிப்பு பின்னர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}