இல்லத்தரசிகளுக்கு நற்செய்தி.. தீபாவளியை முன்னிட்டு.. நவம்பர் 5ம் தேதி ரேஷன் கடை உண்டு

Nov 01, 2023,01:01 PM IST


சென்னை: தீபாவளி பண்டிகை,  நவம்பர் 12ம் தேதி வருவதை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக நவம்பர் 5ம் தேதி ஞாயிறு அன்று ரேசன் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இந்த வருடம் தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஆதலால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் உணவுத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில்,  வரும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி தின விடுமுறையினை முன்னிட்டு, அதற்கு முன்னதாக பொதுமக்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் கிடைக்க வேண்டும். இதனை முன்னிட்டு, வரும் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் திறந்து இருக்கும்.




அதனால் தங்கள் கடைகளில் உள்ள அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை ,  உள்ளிட்ட  பொருட்களை தேவையான அளவு இருப்பை ரேஷன் ஊழியர்கள் சரிபார்த்து கொள்ள வேண்டும். நவம்பர்  5ம் ஞாயிற்றுக்கிழமை வேலை நாளை ஈடுகட்டும் பொருட்டு, அடுத்து  ஏதேனும் ஒரு நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்படும். அதற்கான அறிவிப்பு பின்னர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்