வாய்ப்பே இல்லை.. சசிகலாவிற்கு அதிமுகவில் மீண்டும் இடம் கிடையாது.. ஆர்.பி.உதயகுமார்

Jul 18, 2024,03:59 PM IST

மதுரை:   சசிகலாவுக்கு அதிமுகவில் மீண்டும் இடம் கிடையாது. கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது. சசிகலா சுற்றுப்பயணம், கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.


அதிமுகவினரை சந்திக்கும் பயணத்தை சசிகலா மேற்கொண்டுள்ளார். தென்காசியில் நேற்று இந்தப் பயணம் தொடங்கியது. இதற்கு பெருமளவில் தொண்டர்கள் திரண்டதால் அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில் இதுகுறித்து மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் ஆர்.பி. உதயக்குமார் பேசும்போது,  தலைமைக் கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இவர்களை சேர்க்க வேண்டும், அவர்களை சேர்க்க வேண்டும் என்று யாரும் கூறவில்லை. அவர்களை சேர்க்க யாரும் விரும்பவில்லை. இவர்கள் இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்பது கற்பனை கதை. மக்கள் நினைத்தால் தான் வெற்றி பெற முடியும். மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார். தி அயன் மேன் ஆப் தமிழ்நாடு எடப்பாடி பழனிச்சாமி.




கறந்த பால் மடி புகாது. கருவாடு மீன் ஆகாது. சசிகலா சுற்றுப்பயணம் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது. அதிகாரம் கையில் இருந்த போது சசிகலா தான் சார்ந்த சமூகத்திற்கும் ஒன்றும் செய்யவில்லை. சசிகலா தான் சார்ந்த சமூக மக்களுக்கு என்ன செய்தார் என்பதை கூற முடியுமா? தான் சார்ந்த சமூகத்துக்கு மட்டுமல்லாது அந்த சமூகத்தைச் சேர்ந்த அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்களின் மோசமான நிலைக்கும் சசிகலா தான் காரணம். உள்ளடி வேலைகள் காரணமாக அதிமுக ஆட்சியை இழந்தது.


சசிகலா தான் சார்ந்த சமூக மக்களுக்கு எதையும் செய்யவில்லை. சசிகலாவால் பயனடைந்தவர்கள் என்று யாராவது உள்ளார்களா? சசிகலா செல்வது சுற்றுப்பயணம் அல்ல, சுற்றுலா பயணம். அதிமுகவினர் தற்போது தான் சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர். அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணம்.


33 ஆண்டு காலம் ஜெயலலிதாவுடன் இருந்து ஆட்சி நிர்வாகத்தை கவனித்ததாக சொல்லிக் கொண்டிருக்கிறார் சசிகலா. ஜெயலலிதாவுடன் இருந்து அதிமுக ஆட்சியை வழி நடத்தியதாக கூறிக் கொள்ளும் சசிகலா, அவர் சார்ந்த சமூகத்தினருக்கு  செய்த நன்மை என்ன?  தான் சார்ந்த பின்புலத்தை காட்டி சசிகலா தன்னைத்தானே வளர்த்துக் கொண்டாரே தவிர மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்