வாய்ப்பே இல்லை.. சசிகலாவிற்கு அதிமுகவில் மீண்டும் இடம் கிடையாது.. ஆர்.பி.உதயகுமார்

Jul 18, 2024,03:59 PM IST

மதுரை:   சசிகலாவுக்கு அதிமுகவில் மீண்டும் இடம் கிடையாது. கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது. சசிகலா சுற்றுப்பயணம், கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.


அதிமுகவினரை சந்திக்கும் பயணத்தை சசிகலா மேற்கொண்டுள்ளார். தென்காசியில் நேற்று இந்தப் பயணம் தொடங்கியது. இதற்கு பெருமளவில் தொண்டர்கள் திரண்டதால் அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில் இதுகுறித்து மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் ஆர்.பி. உதயக்குமார் பேசும்போது,  தலைமைக் கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இவர்களை சேர்க்க வேண்டும், அவர்களை சேர்க்க வேண்டும் என்று யாரும் கூறவில்லை. அவர்களை சேர்க்க யாரும் விரும்பவில்லை. இவர்கள் இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்பது கற்பனை கதை. மக்கள் நினைத்தால் தான் வெற்றி பெற முடியும். மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார். தி அயன் மேன் ஆப் தமிழ்நாடு எடப்பாடி பழனிச்சாமி.




கறந்த பால் மடி புகாது. கருவாடு மீன் ஆகாது. சசிகலா சுற்றுப்பயணம் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது. அதிகாரம் கையில் இருந்த போது சசிகலா தான் சார்ந்த சமூகத்திற்கும் ஒன்றும் செய்யவில்லை. சசிகலா தான் சார்ந்த சமூக மக்களுக்கு என்ன செய்தார் என்பதை கூற முடியுமா? தான் சார்ந்த சமூகத்துக்கு மட்டுமல்லாது அந்த சமூகத்தைச் சேர்ந்த அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்களின் மோசமான நிலைக்கும் சசிகலா தான் காரணம். உள்ளடி வேலைகள் காரணமாக அதிமுக ஆட்சியை இழந்தது.


சசிகலா தான் சார்ந்த சமூக மக்களுக்கு எதையும் செய்யவில்லை. சசிகலாவால் பயனடைந்தவர்கள் என்று யாராவது உள்ளார்களா? சசிகலா செல்வது சுற்றுப்பயணம் அல்ல, சுற்றுலா பயணம். அதிமுகவினர் தற்போது தான் சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர். அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணம்.


33 ஆண்டு காலம் ஜெயலலிதாவுடன் இருந்து ஆட்சி நிர்வாகத்தை கவனித்ததாக சொல்லிக் கொண்டிருக்கிறார் சசிகலா. ஜெயலலிதாவுடன் இருந்து அதிமுக ஆட்சியை வழி நடத்தியதாக கூறிக் கொள்ளும் சசிகலா, அவர் சார்ந்த சமூகத்தினருக்கு  செய்த நன்மை என்ன?  தான் சார்ந்த பின்புலத்தை காட்டி சசிகலா தன்னைத்தானே வளர்த்துக் கொண்டாரே தவிர மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்