இதுவரை எவ்வளவு ரூ.2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது தெரியுமா?

Aug 02, 2023,10:52 AM IST
டெல்லி : இதுவரை எவ்வளவு ரூ.2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது என்ற விபரத்தை மத்திய ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. 

எந்த காரணத்திற்காக ரூ.2000 நோட்டுக்கள் தடை செய்யப்பட்டதோ அந்த முயற்சி 88 சதவீதம் வெற்றி அடைந்து விட்டதாகவும் ஆர்பிஐ தரப்பு சொல்கிறது.



கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் உயர் பண மதிப்பு கொண்டு ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு தடை செய்து வருகிறது. ஏற்கனவே 2018 ம் ஆண்டு ரூ.500, 1000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மே மாதம் புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக ஆர்பிஐ அறிவித்தது. இவற்றை வங்கிகளில் மாற்றிக் கொள்ள செப்டம்பர் 30 ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும் மத்திய நிதி அமைச்சகம் கண்டிப்பாக தெரிவித்து விட்டது.

இந்நிலையில் பல்வேறு வங்கிகளில் இருந்து பெறப்பட்ட புள்ளி விபரத்தை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. ஜூலை 31 ம் தேதி வரை புழக்கத்தில் இருந்த ரூ.3.14 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. ஜூலை 31 வரை 0.42 லட்சம் கோடி ரூ.2000 நோட்டுக்கள் மட்டுமே தற்போது புழக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31 ம் தேதி ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையின் படி ரூ.3.62 லட்சம் கோடி ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மே 19 ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்து குறைந்திருந்தது. 

இதுவரை கிடைத்த புள்ளி விபரங்களின் படி புழக்கத்தில் இருந்த 88 சதவீதம் ரூ.2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டு விட்டன. இதுவரை பெறப்பட்ட ரூ.2000 நோட்டுக்களில் 87 சதவீதம் தொகை டெபாசிட்களாக திரும்ப வந்துள்ளதாகவும், மீதமுள்ள 13 சதவீதம் மட்டுமே வங்கிகள் மூலம் மாற்றிக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்