சந்திரயான் 3 விண்ணில் ஏவ ஜூலை 14 ஐ இஸ்ரோ தேர்வு செய்தது ஏன்?

Jul 14, 2023,12:07 PM IST
டெல்லி : சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு ஜூலை 14, பகல் 02.35 மணியை இஸ்ரோ தேர்வு செய்ததற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

சந்திரயான் 3 விண்கலத்தை இன்று விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இஸ்ரோ செய்து விட்டது. இன்னும் சில மணி நேரங்களில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்கலம் செலுத்தப்படவுள்ளது. இந்த நிலையில் இன்று விண்கலத்தை செலுத்த தேதி முடிவுசெய்யப்பட்டது குறித்த விளக்கம்  ஒன்று வெளியாகியுள்ளது.



இது குறித்து இந்திய விண்வெளி ஆய்வாளர் அமன் குமார் கூறுகையில், இந்த நேரத்தில் தான் சந்திரன், பூமிக்கு மிக அருகில் வரும். அதிகமான எரிபொருள் நிரப்பும் கொள்ளளவு கொண்டிருந்தாலும் சந்திரயான் 3, சந்திரனை அடையும் காலம் மிக குறுகியதாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு இஸ்ரோ டீம் இந்த நாளை தேர்வு செய்துள்ளது. 

குறுகிய காலத்தில் சந்திரயான் 3 நிலவில் நிலை நிறுத்தப்படுவதால் எரிபொருள் குறைந்த அளவே தேவைப்படும். ஜூலை 3 தான் நமக்கு பெளர்ணமி வந்தது. அதாவது பூமிக்கு அருகில் நிலவு வரும் சமயம். இதனால் பூமியை நிலவு நெருங்கும் காலம் சந்திரயான் 3 ஐ செலுத்த சரியாக நேரம் என கணிக்கப்பட்டது. 

அதே போல் சந்திரயான் 3 நிலவில் நிலை நிறுத்தப்படும் ஆகஸ்ட் 23 - 24 தேதியும் நிலவும், பூமிக்கு அருகில் வரும் காலமாகும். நிலவில் தண்ணீர் இருப்பதை ஆராய்வதற்காக இந்த திட்டத்தை இந்தியா உருவாக்கி உள்ளது. 

இனி அடுத்தடுத்த கட்ட திட்டங்கள் அமெரிக்காவின் நாசா, ரஷ்யா மற்றும் ஜப்பானுடன் இணைந்து செய்யவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. இது இந்தியா - ஜப்பான் இடையேயான உறவை மேலும் பலப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்