சந்திரயான் 3 விண்ணில் ஏவ ஜூலை 14 ஐ இஸ்ரோ தேர்வு செய்தது ஏன்?

Jul 14, 2023,12:07 PM IST
டெல்லி : சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு ஜூலை 14, பகல் 02.35 மணியை இஸ்ரோ தேர்வு செய்ததற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

சந்திரயான் 3 விண்கலத்தை இன்று விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இஸ்ரோ செய்து விட்டது. இன்னும் சில மணி நேரங்களில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்கலம் செலுத்தப்படவுள்ளது. இந்த நிலையில் இன்று விண்கலத்தை செலுத்த தேதி முடிவுசெய்யப்பட்டது குறித்த விளக்கம்  ஒன்று வெளியாகியுள்ளது.



இது குறித்து இந்திய விண்வெளி ஆய்வாளர் அமன் குமார் கூறுகையில், இந்த நேரத்தில் தான் சந்திரன், பூமிக்கு மிக அருகில் வரும். அதிகமான எரிபொருள் நிரப்பும் கொள்ளளவு கொண்டிருந்தாலும் சந்திரயான் 3, சந்திரனை அடையும் காலம் மிக குறுகியதாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு இஸ்ரோ டீம் இந்த நாளை தேர்வு செய்துள்ளது. 

குறுகிய காலத்தில் சந்திரயான் 3 நிலவில் நிலை நிறுத்தப்படுவதால் எரிபொருள் குறைந்த அளவே தேவைப்படும். ஜூலை 3 தான் நமக்கு பெளர்ணமி வந்தது. அதாவது பூமிக்கு அருகில் நிலவு வரும் சமயம். இதனால் பூமியை நிலவு நெருங்கும் காலம் சந்திரயான் 3 ஐ செலுத்த சரியாக நேரம் என கணிக்கப்பட்டது. 

அதே போல் சந்திரயான் 3 நிலவில் நிலை நிறுத்தப்படும் ஆகஸ்ட் 23 - 24 தேதியும் நிலவும், பூமிக்கு அருகில் வரும் காலமாகும். நிலவில் தண்ணீர் இருப்பதை ஆராய்வதற்காக இந்த திட்டத்தை இந்தியா உருவாக்கி உள்ளது. 

இனி அடுத்தடுத்த கட்ட திட்டங்கள் அமெரிக்காவின் நாசா, ரஷ்யா மற்றும் ஜப்பானுடன் இணைந்து செய்யவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. இது இந்தியா - ஜப்பான் இடையேயான உறவை மேலும் பலப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்