சந்திரயான் 3 விண்ணில் ஏவ ஜூலை 14 ஐ இஸ்ரோ தேர்வு செய்தது ஏன்?

Jul 14, 2023,12:07 PM IST
டெல்லி : சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு ஜூலை 14, பகல் 02.35 மணியை இஸ்ரோ தேர்வு செய்ததற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

சந்திரயான் 3 விண்கலத்தை இன்று விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இஸ்ரோ செய்து விட்டது. இன்னும் சில மணி நேரங்களில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்கலம் செலுத்தப்படவுள்ளது. இந்த நிலையில் இன்று விண்கலத்தை செலுத்த தேதி முடிவுசெய்யப்பட்டது குறித்த விளக்கம்  ஒன்று வெளியாகியுள்ளது.



இது குறித்து இந்திய விண்வெளி ஆய்வாளர் அமன் குமார் கூறுகையில், இந்த நேரத்தில் தான் சந்திரன், பூமிக்கு மிக அருகில் வரும். அதிகமான எரிபொருள் நிரப்பும் கொள்ளளவு கொண்டிருந்தாலும் சந்திரயான் 3, சந்திரனை அடையும் காலம் மிக குறுகியதாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு இஸ்ரோ டீம் இந்த நாளை தேர்வு செய்துள்ளது. 

குறுகிய காலத்தில் சந்திரயான் 3 நிலவில் நிலை நிறுத்தப்படுவதால் எரிபொருள் குறைந்த அளவே தேவைப்படும். ஜூலை 3 தான் நமக்கு பெளர்ணமி வந்தது. அதாவது பூமிக்கு அருகில் நிலவு வரும் சமயம். இதனால் பூமியை நிலவு நெருங்கும் காலம் சந்திரயான் 3 ஐ செலுத்த சரியாக நேரம் என கணிக்கப்பட்டது. 

அதே போல் சந்திரயான் 3 நிலவில் நிலை நிறுத்தப்படும் ஆகஸ்ட் 23 - 24 தேதியும் நிலவும், பூமிக்கு அருகில் வரும் காலமாகும். நிலவில் தண்ணீர் இருப்பதை ஆராய்வதற்காக இந்த திட்டத்தை இந்தியா உருவாக்கி உள்ளது. 

இனி அடுத்தடுத்த கட்ட திட்டங்கள் அமெரிக்காவின் நாசா, ரஷ்யா மற்றும் ஜப்பானுடன் இணைந்து செய்யவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. இது இந்தியா - ஜப்பான் இடையேயான உறவை மேலும் பலப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்