சந்திரயான் 3 விண்ணில் ஏவ ஜூலை 14 ஐ இஸ்ரோ தேர்வு செய்தது ஏன்?

Jul 14, 2023,12:07 PM IST
டெல்லி : சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு ஜூலை 14, பகல் 02.35 மணியை இஸ்ரோ தேர்வு செய்ததற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

சந்திரயான் 3 விண்கலத்தை இன்று விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இஸ்ரோ செய்து விட்டது. இன்னும் சில மணி நேரங்களில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்கலம் செலுத்தப்படவுள்ளது. இந்த நிலையில் இன்று விண்கலத்தை செலுத்த தேதி முடிவுசெய்யப்பட்டது குறித்த விளக்கம்  ஒன்று வெளியாகியுள்ளது.



இது குறித்து இந்திய விண்வெளி ஆய்வாளர் அமன் குமார் கூறுகையில், இந்த நேரத்தில் தான் சந்திரன், பூமிக்கு மிக அருகில் வரும். அதிகமான எரிபொருள் நிரப்பும் கொள்ளளவு கொண்டிருந்தாலும் சந்திரயான் 3, சந்திரனை அடையும் காலம் மிக குறுகியதாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு இஸ்ரோ டீம் இந்த நாளை தேர்வு செய்துள்ளது. 

குறுகிய காலத்தில் சந்திரயான் 3 நிலவில் நிலை நிறுத்தப்படுவதால் எரிபொருள் குறைந்த அளவே தேவைப்படும். ஜூலை 3 தான் நமக்கு பெளர்ணமி வந்தது. அதாவது பூமிக்கு அருகில் நிலவு வரும் சமயம். இதனால் பூமியை நிலவு நெருங்கும் காலம் சந்திரயான் 3 ஐ செலுத்த சரியாக நேரம் என கணிக்கப்பட்டது. 

அதே போல் சந்திரயான் 3 நிலவில் நிலை நிறுத்தப்படும் ஆகஸ்ட் 23 - 24 தேதியும் நிலவும், பூமிக்கு அருகில் வரும் காலமாகும். நிலவில் தண்ணீர் இருப்பதை ஆராய்வதற்காக இந்த திட்டத்தை இந்தியா உருவாக்கி உள்ளது. 

இனி அடுத்தடுத்த கட்ட திட்டங்கள் அமெரிக்காவின் நாசா, ரஷ்யா மற்றும் ஜப்பானுடன் இணைந்து செய்யவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. இது இந்தியா - ஜப்பான் இடையேயான உறவை மேலும் பலப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்