திருநெல்வேலி : தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரில் அளவு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால் நெல்லையே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.
வங்கடக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை, கன்னியாக்குமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே இந்த 4 மாவட்டங்களிலும், சென்னையில் பெய்ததை போல் பேய் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து, மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தொடர்ந்து கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் நீராவரத்து அதிகரித்து வருகிறது. அணைகளுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் நீர் முழுவதும் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. நெல்லை மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 30,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 40,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}