திருநெல்வேலி : தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரில் அளவு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால் நெல்லையே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.
வங்கடக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை, கன்னியாக்குமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே இந்த 4 மாவட்டங்களிலும், சென்னையில் பெய்ததை போல் பேய் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து, மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தொடர்ந்து கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் நீராவரத்து அதிகரித்து வருகிறது. அணைகளுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் நீர் முழுவதும் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. நெல்லை மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 30,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 40,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
GenZ வேற லெவல்தான்.. நிஜ காதலியை விட.. ஏஐ காதலிதான் ரொம்ப பிடிச்சிருக்காம்!
Ladies Finger: வெண்டைக்காய் ஒரு விளையாட்டு பொருளா?
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
Tamil Short Story: நிலாவின் மந்திரச் சொல்!
கற்ற கல்வி உதவுமா?
M Bharathi Poem: ஆட்சி!
அர்கியம் அமைப்பின் AI-ஆதார் செயலி அறிமுகம்
நிலவின் கவிதை!
எங்கே எனது கவிதை!
{{comments.comment}}