"ஹோட்டலுக்குள்" காலெடுத்து வைக்கும் முகேஷ் அம்பானி!

Aug 26, 2023,10:48 AM IST

மும்பை : முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஓட்டல் பிசினசிலும் அடியெடுத்து வைக்க உள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல இங்கிலாந்திலும் இந்த பிசினசை விரிவாக செய்ய உள்ளதாம்.


உலகம் பணக்காரர்கள் பட்டியலில் முக்கிய இடத்தை பல ஆண்டுகளாக தக்க வைத்துக் கொண்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி, தற்போது தனது தொழில் சாம்ராஜ்யத்தை மேலும் விரிவுபடுத்த போகிறார். டெக்னாலஜி, தொலைப்தொடர்பு உள்ளிட்ட பல தொழில்களை ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறது. தற்போது பிரபல ஓட்டல் துறை நிறுவனமான ஒபராய் நிறுவனத்துடன் இணைந்து இந்தியா மற்றும் இங்கிலாந்தில் 3 ஓட்டல்களை நடத்த திட்டமிட்டுள்ளது. 




மும்பையின் பந்த்ரா குர்லா காம்ளக்சில் உள்ள ஆனந்த் விலாஸ் ஓட்டல், இங்கிலாந்தில் ஸ்டோக் பார்க் ஆகிய ஓட்டல்களை ரிலையன்ஸ் துவங்க உள்ளது. இது தவிர குஜராத்திலும் இரண்டு பிரம்மாண்ட ஓட்டல்களை திறக்க உள்ளதாம். ரிலையன்ஸ் திறக்க உள்ள ஓட்டல்களில் விளையாட்டு வசதிகள், கோல்ஃப் கோர்ஸ், உள்ளிட்ட பல வசதிகள் இருக்குமாம். உலக தரத்திலான வசதிகளை வழங்குவதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒபராய் நிறுவனம் துணையாக இருந்து வருகிறதாம்.


ஏற்கனவே இந்தியாவில் பெரும்பாலான துறைகளில் தடம் பதித்து விட்ட ரிலையன்ஸ் தற்போது ஓட்டல் பிசினசிலும் இறங்க உள்ளதால் உலக அளவில் பல முன்னணி நிறுவனங்களுக்கு கடும் தொழில் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்