IPL2024.. மீண்டும் வருகிறார் ரிஷப் பந்த்.. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக!

Dec 12, 2023,06:37 PM IST

டெல்லி: சாலைவிபத்தில் காயமடைந்து குணமடைந்து ஓய்வில் இருந்து வரும் ரிஷப் பந்த் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்கிறார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக அவர் செயல்படவுள்ளார். 


2016ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமானார் பந்த். அதன் பிறகு 98 போட்டிகளில் அவர் ஆடியுள்ளார். 2838 ரன்களையும் எடுத்துள்ளார். இவரது ஸ்டிரைக் ரேட் 147.97 ஆக உள்ளது. தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ரிஷப் பந்த் அடுத்த ஆண்டு தொடரில் கேப்டனாக செயல்படவுள்ளார். 


ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே அவர் விளையாடும் தகுதியை அடைந்து விடுவார் என்ற நம்பிக்கையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி உள்ளது. சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். அங்கு தீவிர பயிற்சியிலும் கலந்து கொண்டார். ரிக்கி பான்டிங், சவுரவ் கங்குலி, பிரவீன் அம்ரே ஆகியோர் அந்த பயிற்சி முகாமின்போது ரிஷப் பந்த்தின் ஆட்டத் திறனை கண்காணித்தனர். அவருக்கு பல அறிவுரைகளையும் கொடுத்தனர்.




சாலை விபத்தில் சிக்கிய பிறகு சிகிச்சை மற்றும் ஓய்வில் இருந்து வருகிறார் பந்த். ஆக்டிவான கிரிக்கெட் போட்டிகளில் இன்னும் அவர் பங்கேற்கவில்லை. அவர் பல மாதங்களாகவே கிரிக்கெட் விளையாடாமலும் இருந்து வருகிறார். இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மூலமாக அவர் மீண்டும் தொழில்முறை கிரிக்கெட்டுக்குத் திரும்பவுள்ளார்.


கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பந்த் ஆட முடியவில்லை. அதேபோல உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, உலகக் கோப்பைக் கிரிக்கெட் ஆகியவற்றையும் அவர் மிஸ் செய்து விட்டார். ஆனால் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர்பான விளம்பரங்களில் பந்த்தான் டாப்பில் இருந்தார் என்பது முக்கியமானது.

சமீபத்திய செய்திகள்

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்