அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவுடன், அவரது மனைவியும் பாஜக எம்எல்ஏவுமான ரிவபா ரவீந்திர ஜடேஜா கத்தியுடன் சூப்பராக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.
சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் போராடித் தோல்வி அடைந்தது. இதே அகமதாபாத் மைதானத்தில்தான் ஐபிஎல் இறுதிப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா அட்டகாசமாக ஆடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்திருந்தார். ஆனால் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவரது ஆட்டம் ஏமாற்றத்தையே கொடுத்தது.
இந்த நிலையில் அவரது மனைவி ரிவபா டிவிட்டர் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களைப் போட்டுள்ளார். அதாவது கத்தியுடன் ரிவபாவும், அவரது கணவர் ஜடேஜாவும் இருக்கிறார்கள். கத்தியை எப்படி சுத்துவது என்று ரிவபாவுக்கு, ஜடேஜா சொல்லிக் கொடுப்பது போலத் தெரிகிறது.
குஜராத்தில் பிரபலமானது இந்த கத்தி டான்ஸ். மெர் சமூக மக்களிடையே இது பாப்புலரானது, இது அவர்களது கலாச்சாரமும் கூட. ஜடேஜா கூட தனது திருமண விழாவின்போது கத்தி சுற்றி டான்ஸ் ஆடி அசத்தியிருந்தார். அப்போது அந்த வீடியோ படு வேகமாக வைரலானது. இந்த நிலையில் கத்தி சுற்றிக் காட்டி பயிற்சி கொடுத்தாரா அல்லது இருவரும் சேர்ந்து ஆடுவதற்கான முன்னோட்டமா இது என்று தெரியவில்லை.
இந்தப் புகைப்படத்தைப் போட்டு, மகுடம் முக்கியமில்லை.. கத்திதான் முக்கியம் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் ரிவபா. இதன் மூலம் அவர், உலகக் கோப்பையை வெல்லாதது முக்கியம் இல்லை.. சூப்பராக சண்டை செய்தோம்ல.. அது போதும் என்று ஆறுதலாக சொல்லியுள்ளார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் விளக்கம் தருகிறார்கள்.
அதுவும் சரித்தான்..!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}