டில்லி : ரூ.2000 நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்காக மத்திய அரசு அளித்திருந்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால் இன்னும் ரூ.2000 நோட்டுக்களை மாற்றாதவர்களும் தங்களிடம் உள்ள நோட்டுக்களை மாற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது.
ரூ.2000 நோட்டுக்களை திரும்ப பெறுவதாக மத்திய அரசு ஜூன் மாதம் அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்கள் வங்கிக் கிளைகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் அல்லது வங்கிக் கணக்கில் முதலீடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கு செப்டம்பர் 30 ம் தேதி வரை காலக் கெடு வழங்கப்பட்டதுடன், அது மேலும் நீட்டிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டது. இதனால் பலரும் தங்களிடம் இருந்த ரூ.2000 நோட்டுக்களை மாற்றி வந்தனர்.

ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கு மேலும் சில நாட்கள் அவகாசம் வேண்டும் என பலரும் கேட்டுக் கொண்டதால் இதற்கான கால அவகாரத்தை அக்டோபர் 07 வரை மத்திய ரிசர்வ் வங்கி நீட்டித்தது. இதன்படி ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடு இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இதுவரை 80 சதவீதம் ரூ.2000 நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும், இன்று ரூ.12,000 கோடி அளவிலான ரூ.2000 நோட்டுக்கள் திரும்ப வரவில்லை என்றும் ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
காலக் கெடு முடிந்து விட்ட நிலையில் ரூ.2000 நோட்டுக்களை நாளை முதல், அதாவது அக்டோபர் 08ம் தேதி முதல் ரூ.2000 நோட்டுக்களை மாற்ற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் படி,
* ஆர்பிஐ.,யின் 19 மண்டல அலுவலங்களில் ஏதாவது ஒன்றிற்கு நேரில் சென்று மாற்றிக் கொள்ளலாம்.
* ரூ.20,000 வரையிலான ரூ.2000 நோட்டுக்களையோ அல்லது ஒரே சமயத்தில் 10 ரூ.2000 நோட்டுக்களையோ நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும்.
* தபால் மூலம் ஆர்பிஐ மண்டல அலுவலகங்களுக்கு ரூ.2000 நோட்டுக்களை அனுப்பி வைக்கலாம்.
* ரூ.20,000 க்கு அதிகமான ரூ.2000 நோட்டுக்களை மாற்ற வேண்டும் அல்லது வேறு ஏதாவது வழியில் மாற்ற வேண்டும் என்பவர்கள் அதற்கான உரிய ஆவணங்களை அரசிடம் சமர்பிக்க வேண்டும்.
Tamil Short Story: புதுமைப்பெண்!
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
ஆதலால் காதல் செய்வீர்!
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
{{comments.comment}}