டில்லி : ரூ.2000 நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்காக மத்திய அரசு அளித்திருந்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால் இன்னும் ரூ.2000 நோட்டுக்களை மாற்றாதவர்களும் தங்களிடம் உள்ள நோட்டுக்களை மாற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது.
ரூ.2000 நோட்டுக்களை திரும்ப பெறுவதாக மத்திய அரசு ஜூன் மாதம் அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்கள் வங்கிக் கிளைகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் அல்லது வங்கிக் கணக்கில் முதலீடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கு செப்டம்பர் 30 ம் தேதி வரை காலக் கெடு வழங்கப்பட்டதுடன், அது மேலும் நீட்டிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டது. இதனால் பலரும் தங்களிடம் இருந்த ரூ.2000 நோட்டுக்களை மாற்றி வந்தனர்.

ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கு மேலும் சில நாட்கள் அவகாசம் வேண்டும் என பலரும் கேட்டுக் கொண்டதால் இதற்கான கால அவகாரத்தை அக்டோபர் 07 வரை மத்திய ரிசர்வ் வங்கி நீட்டித்தது. இதன்படி ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடு இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இதுவரை 80 சதவீதம் ரூ.2000 நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும், இன்று ரூ.12,000 கோடி அளவிலான ரூ.2000 நோட்டுக்கள் திரும்ப வரவில்லை என்றும் ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
காலக் கெடு முடிந்து விட்ட நிலையில் ரூ.2000 நோட்டுக்களை நாளை முதல், அதாவது அக்டோபர் 08ம் தேதி முதல் ரூ.2000 நோட்டுக்களை மாற்ற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் படி,
* ஆர்பிஐ.,யின் 19 மண்டல அலுவலங்களில் ஏதாவது ஒன்றிற்கு நேரில் சென்று மாற்றிக் கொள்ளலாம்.
* ரூ.20,000 வரையிலான ரூ.2000 நோட்டுக்களையோ அல்லது ஒரே சமயத்தில் 10 ரூ.2000 நோட்டுக்களையோ நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும்.
* தபால் மூலம் ஆர்பிஐ மண்டல அலுவலகங்களுக்கு ரூ.2000 நோட்டுக்களை அனுப்பி வைக்கலாம்.
* ரூ.20,000 க்கு அதிகமான ரூ.2000 நோட்டுக்களை மாற்ற வேண்டும் அல்லது வேறு ஏதாவது வழியில் மாற்ற வேண்டும் என்பவர்கள் அதற்கான உரிய ஆவணங்களை அரசிடம் சமர்பிக்க வேண்டும்.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}