சென்னை: தமிழ்நாடு முழுவதும் தீபாவளியையொட்டி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகளில் ரூ. 467 கோடி மது விற்பனை ஆனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருடா வருடம் வரும் தீபாவளியன்று எண்ணைய் தேய்த்துக் குளிக்கிறார்களோ இல்லையோ.. கண்டிப்பாக குடிக்காமல் இருக்க மாட்டார்கள் பலர். அந்த அளவுக்கு தீபாவளிக்கு முதல் நாள் இரவு ஜிலுஜிலுன்னு குடிச்சுட்டுத்தான் அடுத்த நாள் தீபாவளியைக் கொண்டாடுவதை பலர் வழக்கமாக்கி விட்டனர்.
தீபாவளிக்கு எது அதிகமா விற்குமோ இல்லையோ மது விற்பனை மட்டும் படு ஜோராக நடக்கும். இந்த ஆண்டும் அதற்கு ஒரு குறையும் இல்லை எனலாம். கடந்த 2 நாட்களில் மட்டும் 467.69 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. தீபாவளிக்கு முந்தைய சனிக்கிழமை மட்டும் ரூ.221 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

மதுரை மண்டலத்தில் ரூ. 52.73 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் ரூ.48.12 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.40.20 கோடிக்கும், சேலம் மண்டலம் ரூ.39.78 கோடிக்கும் திருச்சியில் ரூ. 40.02 கோடிக்கும் என
மது விற்பனையகியுள்ளது. சனிக்கிழமை விற்பனையில் மதுரை மண்டலம்தான் டாப்பாம்.
முதல் நாளே ரூ.221 கோடினா... தீபாவளி அன்று எவ்வளவு தெரியுமா? அதுக்கும் மேல போயிருச்சு... தீபாவளி அன்று மட்டும் தமிழ்நாட்டில் மது விற்பனை ரூ. 246 கோடிக்கு நடந்துள்ளது. திருச்சி மண்டலத்தில் ரூ.55.60 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் ரூ.52.98 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ. 51.97 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ. 46.62 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.39.61 கோடிக்கும் என நவம்பர் 12ம் தேதியன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு முதல் நாள் மதுரைன்னா.. தீபாவளி நாளன்று அதிகபட்சமாக திருச்சியில் ரூ. 55.60 கோடிக்கு மது விற்பனையானது. 2 நாட்களிலும் சேர்த்து தமிழ்நாட்டிலேயே அதிக அளவாக திருச்சி மண்டலத்தில் ரூ. 95.62 கோடி அளவுக்கு மது விற்பனையாகியுள்ளது (சே.. 100 கோடி ஜஸ்ட் மிஸ் ஆயிருச்சேன்னு அங்கு புலம்பிக் கொண்டுள்ளார்களாம் விற்பனையாளர்கள்). தமிழகத்திலேயே திருச்சி தான் மது விற்பனையில் முதலிடத்தில் உள்ளது.
குடித்த அத்தனை பேரும் பொண்டாட்டி, பிள்ளைகளுக்கு, குடும்பத்துக்கு நல்லபடியாக பண்டிக்கைக்கான எல்லாவற்றையும் செய்திருப்பார்கள் என்று நம்புவோம். மது பிரியர்களே மது வீட்டும் நாட்டிற்கும் கேடு என்பதனை நினைவில் வைத்துக் கொண்டு (அளவோடு) குடித்தால் நல்லது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}