RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்

May 01, 2026,12:04 PM IST

- மொழிப்பித்தன் இரா.ச. குமார்


அடர்த்தியான பின்னிரவை

அப்படியே எழுத முடியுமா என்னால்

இப்படியுமொரு 

வினா எனக்குள்...


முடியும் முடியாதென

வரையறுத்து விட முடியாது

எல்லாம் எழுத முயற்சி...


முயற்சிதான்

இருந்தும்

விடுபடலாம் 

அதிலும் ஒன்றிரண்டு...




அதன் முன்பே

இருளை உள்வாங்கல்

அவசியமாகிறது

பின்பே

காரிருள் கிழித்து மொத்தமாய் 

ஊடுருவி 

அடர் இருளுக்குள் புக வேண்டியதுமாகிறது...


அவசியமெனில் வரிகளுக்குள்

இருளை பூசி 

இருள் இப்படியாகத்தான் இருக்குமென

வர்ணித்து

ஒரு வரையறை தர வேண்டியதாகிறது...


கருப்பிலே கூட மங்கலானது

அடர் கருப்பென இரண்டு

இதில் 

இதுதான் கருப்பென

எதை சொல்லி

கவிதைக்கு இறுதி வடிவம் தருவது...


மரக்கிளைகளில் 

படிந்திருக்கும் இருள்

அப்புறப்படுத்த முயலும்

பிறை நிலவு

இதையும் வரியாக்கி விடலாமா?


அதிபயங்கர கருப்பென குறிப்பெழுதி விட முடியாது

காரணம்

தூரத்து வானத்தில்

மங்கிய வெளிச்சத்தில்

ஒன்றல்ல ஓராயிரம் விண்மீன்கள்

ஆக

அதிபயங்கரமென சொன்னால்

மையிருட்டைக் காட்டி

மங்கிய கருப்போடு ஒப்பிட வேண்டும்...


எது எப்படியோ

உறக்கம் தொலைத்ததில் 

கிடைத்தது 

ஒன்றல்ல ஓராயிரம் கரு கவிதைக்கு...!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!

news

RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்

news

ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)

news

May Day: தொழிலாளர் தினம்.. உழைப்பில்லாமல் கிடைப்பது நிலைத்திருப்பது இல்லை!

news

Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!

news

May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'

news

மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்

news

சித்திரை திருவிழா.. மதுரை குலுங்க.. கள்ளழகர் வைகை ஆற்றில் நாளை இறங்குகிறார்!

news

அனுபவம் அறிவோம்.. செலவு குறைந்த புதுவிதமான சிறந்த திருமணம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்