மாஸ்கோ: கூகுள் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யூடியூபில் ரஷ்ய அரசு செய்தி நிறுவன சானல்கள், இருட்டடிப்பு செய்யப்பட்டதால் கடுப்பான ரஷ்ய அரசு, கூகுள் நிறுவனத்துக்கு மிகப் பெரிய அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த அபராதத்தைக் கட்டாவிட்டால் ரஷ்யாவில் கூகுள் சேவை தடை செய்யப்படும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.
கூகுள் நிறுவனத்துக்கு ரஷ்யா விதித்துள்ள அபராதம் என்ன தெரியுமா.. 20 டெசில்லன் டாலர்கள் ஆகும். எளிதாக புரிய வேண்டுமானால், 2 போட்டு அதற்குப் பின்னர் 34 ஜீரோக்களை சேர்த்துக்கங்க.. அதுதான் அபராதத் தொகை. வரலாறு காணாத இந்த அபராதத் தொகையை கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நடத்தி வரும் யூடியூப் நிறுவனத்திற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ளது.
யூடியூப் நிறுவனம், ரஷ்ய ஆதரவு செய்தி நிறுவனங்கள் பல்வற்றை தடை செய்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை கூகுள் எடுத்துள்ளது. இதனால்தான் இப்படி ஒரு வரலாறு காணாத அபராதத்தை ரஷ்ய அரசு விதித்துள்ளது.
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே முடிவில்லா போர் நீண்டு வருகிறது. இந்தப் போரை நிறத்தும் வழி தெரியாமல் ஐரோப்பிய நாடுகள் விழி பிதுங்கிப் போயுள்ளன. இந்த நிலைியல் ரஷ்ய அரசு ஆதரவு டிவி சானல்களை யூடியூப் தடை செய்துள்ளது. இந்தத் தடைக்கு எதிராக ரஷ்ய டிவியும் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில்தான் ரஷ்ய அரசு இப்படி ஒரு அபராதத்தை விதிதித்துள்ளது. இந்த அபராதத்தை செலுத்த 9 மாத கால அவகாசமும் அளித்துள்ளது ரஷ்ய அரசு. அபராதம் செலுததத் தவறினால் தினசரி அந்த அபராதத் தொகையானது 2 மடங்காக அதிகரிக்கப்படும் என்றும் ரஷ்ய அரசு எச்சரித்துள்ளது.
கடந்த மார்ச் 2022ம் ஆண்டு முதல் யூடியூபில், ரஷ்ய ஆதரவு மீடியாக்களான ஸ்புட்னிக் மற்றும் ஆர்டி ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படும் 1000க்கும் மேற்பட்ட சானல்களையும் யூடியூப் முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}