2 போட்டு 34 ஜீரோ போட்டுக்கங்க... கூகுளுக்கு பயங்கரமான அபராதம் விதித்த ரஷ்ய அரசு.. என்னாச்சு??

Nov 01, 2024,01:16 PM IST

மாஸ்கோ: கூகுள் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யூடியூபில் ரஷ்ய அரசு செய்தி நிறுவன சானல்கள், இருட்டடிப்பு செய்யப்பட்டதால் கடுப்பான ரஷ்ய அரசு, கூகுள் நிறுவனத்துக்கு மிகப் பெரிய அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த அபராதத்தைக் கட்டாவிட்டால் ரஷ்யாவில் கூகுள் சேவை தடை செய்யப்படும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.


கூகுள் நிறுவனத்துக்கு ரஷ்யா விதித்துள்ள அபராதம் என்ன தெரியுமா.. 20 டெசில்லன் டாலர்கள் ஆகும். எளிதாக புரிய வேண்டுமானால், 2 போட்டு அதற்குப் பின்னர் 34 ஜீரோக்களை சேர்த்துக்கங்க.. அதுதான் அபராதத் தொகை. வரலாறு காணாத இந்த அபராதத் தொகையை கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நடத்தி வரும் யூடியூப் நிறுவனத்திற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ளது.




யூடியூப் நிறுவனம், ரஷ்ய ஆதரவு செய்தி நிறுவனங்கள் பல்வற்றை தடை செய்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை  கூகுள் எடுத்துள்ளது. இதனால்தான் இப்படி ஒரு வரலாறு காணாத அபராதத்தை ரஷ்ய அரசு விதித்துள்ளது.


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே முடிவில்லா போர் நீண்டு வருகிறது. இந்தப் போரை நிறத்தும் வழி தெரியாமல் ஐரோப்பிய நாடுகள் விழி பிதுங்கிப் போயுள்ளன. இந்த நிலைியல் ரஷ்ய அரசு ஆதரவு டிவி சானல்களை யூடியூப் தடை செய்துள்ளது. இந்தத் தடைக்கு எதிராக ரஷ்ய டிவியும் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில்தான் ரஷ்ய அரசு இப்படி ஒரு அபராதத்தை விதிதித்துள்ளது. இந்த அபராதத்தை செலுத்த 9 மாத கால அவகாசமும் அளித்துள்ளது ரஷ்ய அரசு. அபராதம் செலுததத் தவறினால் தினசரி அந்த அபராதத் தொகையானது 2 மடங்காக அதிகரிக்கப்படும் என்றும் ரஷ்ய அரசு எச்சரித்துள்ளது.


கடந்த மார்ச் 2022ம் ஆண்டு முதல் யூடியூபில், ரஷ்ய ஆதரவு மீடியாக்களான ஸ்புட்னிக் மற்றும் ஆர்டி ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.  இது மட்டுமல்லாமல் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படும் 1000க்கும் மேற்பட்ட சானல்களையும் யூடியூப் முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்