"கேப்டன்" விஜயகாந்த் நினைவிடத்திற்கு இன்று வருகிறார் விஷால்.. எஸ்.ஏ சந்திரசேகரும் வருகை!

Jan 06, 2024,11:24 AM IST

சென்னை: விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று நடிகர் விஷால் வருகை தரவுள்ளதால் ரசிகர்கள் குவிந்துள்ளனர். அதேபோல இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகரும் இன்று அஞ்சலி செலுத்தவுள்ளார். அதேபோல நடிகர் அதர்வாவும் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.


சிறந்த நடிகராகவும் விளங்கிய தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் டிசம்பர் 28 அன்று மறைந்தார். பல்வேறு திரை பிரபலங்கள், ரசிகர்கள், தொண்டர்கள், என அனைவரும் அவரது இறப்பு நிகழ்வில் பங்கு பெற்ற நிலையில், சென்னை மாநகரமே ஸ்தம்பித்தது. அந்த அளவிற்கு கேப்டன் மறைவிற்கு அலைகடலென கூட்டம் திரண்டது. பின்னர் அவருடைய உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

அவருடைய நினைவிடத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.




விஜயகாந்த் செய்த நன்மைகள் ஏராளம். இதனை நினைவு கூறும் வகையில், பல்வேறு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவரைப் பற்றி பேசி, இனிவரும் காலத்தில் அவரது கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும் என விஜயகாந்த் நினைவிடத்தில் சபதம் மேற்கொண்டும் வருகின்றனர். 


நடிகர்கள் கார்த்திக், சிவக்குமார், மற்றும் சூர்யா ஆகியோர் விஜயகாந்த் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினர். இந்த நிலையில், நடிகர் விஜய்யின் தந்தையும், விஜயகாந்த்துக்கு தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்து அவரது முன்னேற்றத்துக்குக் காரணமானவருமான இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். இதனைத் தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லம் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவும் உள்ளார் .


விஷால் வருகிறார்


நடிகர் விஷால் மற்றும் அதர்வா பிரேமலதா விஜயகாந்த்தை நேரில் சந்தித்து  ஆறுதல் தெரிவிக்கவும் உள்ளனர்.  நடிகர் விஷால் வருவதையொட்டி ரசிகர்கள் பெருமளவில் நினைவிடத்தில் குவிந்துள்ளனர். விஜயகாந்த் மறைந்த அன்றே ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் விஷால். அதில் அழுதபடி பேசினார். இந்த நிலையில் இன்று அவர் சென்னை வந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்