சென்னை: விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று நடிகர் விஷால் வருகை தரவுள்ளதால் ரசிகர்கள் குவிந்துள்ளனர். அதேபோல இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகரும் இன்று அஞ்சலி செலுத்தவுள்ளார். அதேபோல நடிகர் அதர்வாவும் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.
சிறந்த நடிகராகவும் விளங்கிய தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் டிசம்பர் 28 அன்று மறைந்தார். பல்வேறு திரை பிரபலங்கள், ரசிகர்கள், தொண்டர்கள், என அனைவரும் அவரது இறப்பு நிகழ்வில் பங்கு பெற்ற நிலையில், சென்னை மாநகரமே ஸ்தம்பித்தது. அந்த அளவிற்கு கேப்டன் மறைவிற்கு அலைகடலென கூட்டம் திரண்டது. பின்னர் அவருடைய உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவருடைய நினைவிடத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜயகாந்த் செய்த நன்மைகள் ஏராளம். இதனை நினைவு கூறும் வகையில், பல்வேறு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவரைப் பற்றி பேசி, இனிவரும் காலத்தில் அவரது கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும் என விஜயகாந்த் நினைவிடத்தில் சபதம் மேற்கொண்டும் வருகின்றனர்.
நடிகர்கள் கார்த்திக், சிவக்குமார், மற்றும் சூர்யா ஆகியோர் விஜயகாந்த் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினர். இந்த நிலையில், நடிகர் விஜய்யின் தந்தையும், விஜயகாந்த்துக்கு தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்து அவரது முன்னேற்றத்துக்குக் காரணமானவருமான இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். இதனைத் தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லம் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவும் உள்ளார் .
விஷால் வருகிறார்
நடிகர் விஷால் மற்றும் அதர்வா பிரேமலதா விஜயகாந்த்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும் உள்ளனர். நடிகர் விஷால் வருவதையொட்டி ரசிகர்கள் பெருமளவில் நினைவிடத்தில் குவிந்துள்ளனர். விஜயகாந்த் மறைந்த அன்றே ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் விஷால். அதில் அழுதபடி பேசினார். இந்த நிலையில் இன்று அவர் சென்னை வந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}