சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாசி மாத பூஜைக்காக வருகின்ற பிப்., 13 தேதி நடை திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வருவர். குறிப்பாக, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகமானவர்கள் வருவது வழக்கம். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வந்தனர். கடந்த மாதம் நடைபெற்ற மண்டல மகர விளக்கு பூஜை முடிந்து கடந்த மாதம் 21ஆம் தேதியுடன் நடை சாத்தப்பட்டது. இதில் சுமார் 52 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் மாசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை வருகின்ற 13-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக திறக்கப்படும் நடை 14ஆம் தேதி காலை முதல் 18ம் தேதி வரை 5 நாட்கள் திறந்திருக்கும். அந்த நேரத்தில், சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வழக்கமான பூஜைகளுக்கு பிறகு வரும் 18ம் தேதி இரவு ஹரிவராசனம் பாடல் ிைசக்கப்பட்டு கோயில் நடை சாத்தப்படவுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 12-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
மாசி மாத பூஜையை முன்னிட்டு ஐயப்பன் பக்தர்கள் வசதிக்காக கேரள அரசு சார்பில், பத்தனம்திட்டா, கோட்டயம், செங்கன்னூர், திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, எர்ணாகுளம், பாலக்காடு உட்பட முக்கிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இருந்த கூட்டத்தை போல் இல்லாமல் சற்று குறைவான கூட்டம் வரும் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}