சபரிமலை மாசி மாத பூஜைக்காக பிப்., 13ம் தேதி நடை திறப்பு

Feb 10, 2024,12:32 PM IST

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாசி மாத பூஜைக்காக வருகின்ற பிப்., 13 தேதி நடை திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வருவர். குறிப்பாக, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகமானவர்கள் வருவது வழக்கம். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வந்தனர். கடந்த மாதம் நடைபெற்ற மண்டல மகர விளக்கு பூஜை முடிந்து கடந்த மாதம் 21ஆம் தேதியுடன் நடை சாத்தப்பட்டது. இதில் சுமார் 52 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் மாசி மாத பூஜைக்காக  ஐயப்பன் கோவில் நடை வருகின்ற 13-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




மாசி மாத பூஜைக்காக திறக்கப்படும் நடை 14ஆம் தேதி காலை முதல் 18ம் தேதி வரை 5 நாட்கள் திறந்திருக்கும். அந்த நேரத்தில், சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வழக்கமான பூஜைகளுக்கு பிறகு வரும் 18ம் தேதி இரவு ஹரிவராசனம் பாடல்  ிைசக்கப்பட்டு கோயில் நடை சாத்தப்படவுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 12-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 


மாசி மாத பூஜையை முன்னிட்டு ஐயப்பன் பக்தர்கள் வசதிக்காக கேரள அரசு சார்பில், பத்தனம்திட்டா, கோட்டயம், செங்கன்னூர், திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, எர்ணாகுளம், பாலக்காடு உட்பட முக்கிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இருந்த கூட்டத்தை போல் இல்லாமல் சற்று குறைவான கூட்டம் வரும் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்