- கலைவாணி கோபால்
சபரிமலை: கேரள மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சீசன் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். இதையடுத்து அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு அழைக்கப்பட்டு முகாமிட்டுள்ளனர்.
கார்த்திகை மாதம் தொடங்கியதை முன்னிட்டு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பனை தரிசிக்கும் வகையாக பக்தர்கள் இந்த ஆண்டு அதிக முறையில் கலந்து கொண்டு இருப்பதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அங்குள்ள பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றதால் பக்தர்களை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை என்று கேரளா அரசு அறிவித்துள்ளது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி ஐயப்ப பெண் பக்தர் ஒருவரும் பலி ஆகி உள்ளார் என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கேரளா அரசு அவசர காலத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும் தேசிய பேரிடர் மீட்பு குழுவை அழைத்துள்ளது. பக்தர்களுக்கு தேவையான அவசரத் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இவர்கள் பம்பை மற்றும் சன்னிதான பகுதிகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படும் சமயத்தில் பக்தர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இவர்கள் பாதுகாப்புப் பணியில் துணை நிற்பார்கள்.
(கலைவாணி கோபால், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}