ரிஷப சங்கராந்தி .. சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைதிறப்பு.. 19 வரை திறந்திருக்கும்!

May 17, 2025,11:55 AM IST

- ஸ்வர்ணலட்.சுமி


ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு இந்த ரிஷப சங்கராந்தி நடைதிறப்பு . விசுவாச ஆண்டு 20 25 மே 14ஆம் தேதி விஷ்ணுபதி புண்ணிய கால நேரத்தில் சபரிமலை நடைதிறப்பு நடைபெற்றது .இந்த நடைதிறப்பு" ஈடிச் சனிக்கிழமை" என்றும் ரிஷப சங்கராந்தி நடை என்றும் அழைக்கின்றனர்.


உலகப் புகழ் பெற்ற புனித தலங்களில் ஒன்றான சபரிமலை சாஸ்தா சபரிமலை ஐயப்பன் கோவில் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும்தான் நடைதிறப்பு ,அதாவது தரிசன வாயில் திறக்கப்படுகிறது. மே- 14 முதல் மே- 19ஆம் தேதி வரை இந்த ஐந்து நாட்கள் நடைதிறப்பு திறந்து இருக்கும். இதனை" ரிஷப சங்கராந்தி" நடைதிறப்பு என்று அழைக்கப்படுகிறது.




சபரிமலை நடைதிறப்பு மற்றும் மூடல் காலம்: சபரிமலை நடைதிறப்பு: மே மாதம் 14ஆம் தேதி 2025 ரிஷப சங்கராந்தி அன்று நடை திறக்கப்பட்டது. சபரிமலை நடை மூடல்: மே மாதம் 19 ,  20 25 அன்று இரவு  ஐந்து நாட்கள் வழிபாட்டிற்கு பிறகு நடை மூடப்படும்.


"ரிஷப சங்கராந்தி" நடைதிறப்பு என்பது பொதுவாக மே மாதம் அதாவது தமிழ் மாதம் வைகாசி  மாதத்தின் தொடக்கத்தில் நடை திறக்கப்படும். இந்த நாளில் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நாள் ரிஷப மாத பூஜை என்பதற்காக நடை திறக்கப்படுகிறது. இந்த நடைதிறப்பு ஐந்து நாட்கள் மட்டுமே திறந்து இருப்பதால் ,ஏராளமான பக்தர்கள் ஐயனை தரிசிக்க சென்று வருகின்றனர். இது ஆண்டு முழுவதும் நடைபெறும் சபரிமலை நடைதிறப்புகளில் முக்கியமானதும் சிறப்பானதுமாக கருதப்படுகிறது.


சிறப்பு பூஜைகள்: இந்த ஐந்து நாட்களில் அபிஷேகம் மற்றும் ஹரிவராசனம் ஐயப்பனுக்கு 12 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. தந்தி பூஜை, உற்சவம் மூர்த்தி அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. மகா தீபாராதனை நடை திறக்கும் நாள் மாலை 6 மணிக்கு நடைபெற்றது. பக்தர்கள் நீராடி கருப்பு மற்றும்  நீல நிற உடை அணிந்து மலையற்றி வழியாக சபரிமலை  சென்றடைந்து ஐயனை தரிசிக்கின்றனர் .சுவாமி சரணம் ஐயப்பா என்று  கோஷமிட்டு  ஆயிரக்கணக்கான பக்தர்கள் தர்மசாஸ்தா ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.


இதற்காக பக்தர்கள் சபரிமலை யாத்திரைக்கு முன் ஆன்லைன் வழியாக தரிசனம் பதிவு செய்து கொண்டு செல்கின்றனர். ரிஷப சங்கராந்தி நடைதிறப்பு ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு அரி ய வாய்ப்பு .மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் . வரைந்து எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நெருக்கடியான தெருவில் கடைகளுக்கு நடுவே விடுதி.. அமர்நாத் பயண அனுபவங்கள் (2)

news

Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

அதிகம் பார்க்கும் செய்திகள்