பாதுகாப்பான தீபாவளி - பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு அலுவலர் விழிப்புணர்வு பேச்சு

Oct 17, 2025,05:13 PM IST

சிவகங்கை: பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுவது குறித்து தீயணைப்பு - மீட்பு பணிகள் நிலைய  அதிகாரி பள்ளி மாணவர்களுக்கு நேரடி செயல் முறை விளக்கம் அளித்தார்.


சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது எப்படி?  என  தீயணைப்பு - மீட்பு பணிகள் நிலைய  அதிகாரிகள் பள்ளி மாணவர்களுக்கு நேரடி செயல் முறை விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில், தேவகோட்டை தீயணைப்பு மீட்பு பணிகள்  நிலையத்தை சார்ந்த முன்னனி தீயணைப்போர்  ஆறுமுகம், நாக கார்த்திக், சொக்கலிங்கம், விக்னேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விளக்கம் கொடுத்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆசிரியர் ஸ்ரீதர்   வரவேற்றார். 




இந்நிகழ்ச்சியின் போது  தேவகோட்டை தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலர் கணேசன்   பேசுகையில், குழந்தைகள் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை பெரியவர்களின் மேற்பார்வையில் வெடிக்க வேண்டும். தவறுதலாக நம்மீது வெடி விழுந்துவிட்டால் ஸ்டாப், ட்ராப், ரோல் என்கிற முறையை பின்பற்றுங்கள் .

                                           

புஷ்வாணம், சங்கு சக்கரம், வெடிகள்  வைக்கும்போது பெரிய ஊதுபத்தியை பயன்படுத்துங்கள். சுமார் இரண்டு அடி தள்ளி நின்று வெடியை வையுங்கள். வெடி , வெடிக்கும்போது எப்போதுமே அருகில் தண்ணீர் வைத்து கொள்ளுங்கள்.வெடிகளை பாட்டில், கொட்டாங்குச்சி போன்றவற்றில் வைத்து வெடிக்க கூடாது. வெடிகளை கைகளில் பிடித்து வெடிக்க கூடாது. வெடிக்காமல் இருக்கும் வெடிகளை ஒன்று சேர்த்து தீ வைக்க கூடாது. அவ்வாறு செய்தால் நமது முகத்தில் வெடி வந்து விழுந்து பாதிப்பு ஏற்படும்.


     


வெடிகளை வெடிக்கும்போது நைலான், பாலியஸ்டர் துணிகளை போட்டு கொண்டு வெடிக்க வேண்டாம். பருத்தி துணிகளை அணிந்து மட்டுமே வெடியுங்கள். அதுவே பாதுகாப்பானது. வெடிகளை சட்டை, பேண்ட் பைகளில் வைத்து  கொள்ள வேண்டாம். நாம் வெடிக்கும்போது கவன குறைவாக இருந்தால் நமது மேல் வெடி தீ விழுந்தால் பைகளில் உள்ள வெடிகளும் வெடித்து உயிருக்கு ஆபத்தாகும்.எனவே பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுங்கள் என்று தெரிவித்தார். மேலும், பாதுகாப்பான தீபாவளி  குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.  நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி   நன்றி கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்