சென்னை: சேலைதான் என்னுடைய கம்ஃபர்ட்டபுள் உடை. நிகழ்ச்சிகளின் போது இது தான் வசதியாக உள்ளது. எனவேதான் சேலையில் வருகிறேன் என்று கூறியுள்ளார் சாய்பல்லவி.
சென்னை பொண்ணு நம்ம சாய் பல்லவி. பிரேமம் என்ற மலையாளப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் சாய்பல்லவி. இந்த படத்தில் மலர் டீச்சர் என்ற காதாபாத்திரத்தில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களை கவர்ந்தவர். அதனைத்தொடர்ந்து தமிழில் கடந்த 2005ம் ஆண்டு மீரா ஜாஸ்மின், பிரசன்னா நடிப்பில் வெளியான கஸ்தூரி மான் என்ற படத்தில் தமிழில் அறிமுகமாகினார்.

டான்ஸ், நடிப்பு ஆகிய இரண்டிலும் பட்டையைக் கிளப்புபவர் சாய் பல்லவி. அவரது சிரிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார். தற்போது பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சாய்பல்லவி. தமிழில் அவர் கடைசியாக நடித்த கார்கி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இப்போது அவர் சிவகார்த்திகேயனுடன் அமரன், தெலுங்கில் தண்டல், ஹிந்தியில் ஒரு படம் என பிஸியாக நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
டாக்டர், டான்ஸ்சர், நடிகை என சாய்பல்லவி பன்முகம் கொண்டவர், இயல்பாக நடிக்ககூடியவர். அதிகம் மேக்கப் செய்து கொள்ளாமல் இயல்பான தோற்றத்தில் இருப்பதினால், இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளவர். சாய்பல்லவி பெரும்பாலும் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் அதிக மேக்கப் இல்லாமல், சேலை அணிந்து தான் வருவார். நடிகைகள என்றாலே அதிக மேக்கப்புடன் மாடன் டிஸ்சில் தான் வருவார்கள் என்றால், இவர் மட்டும் அதற்கு நேர் எதிராக விதவிதமான சேலையில் தான் வருவார்.

இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு சாய் பல்லவி பேட்டி கொடுக்கையில் ஏன் எப்பவுமே சேலையில் வர்றீங்க என்று கேட்கப்பட்டது. அதற்கு சாய் பல்லவி, இது என்னுடைய கம்ஃபர்ட்டபுள் உடை. அது தான் எனக்கு வசதியாக இருக்கிறது. ஒரு இடத்தில் பேச வேண்டும் என்றால் என்ன பேச வேண்டும் என்று தான் யோசிக்க வேண்டும். உடையை பற்றியெல்லாம் அந்த நேரத்தில் யோசித்துக் கொண்டிருக்கக்கூடாது. அதனால் தான் எனக்கு வசதியாக இருக்கும் புடவையில் நிகழ்ச்சிகளுக்கு வருகிறேன் என்றார்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}