சென்னை: சேலைதான் என்னுடைய கம்ஃபர்ட்டபுள் உடை. நிகழ்ச்சிகளின் போது இது தான் வசதியாக உள்ளது. எனவேதான் சேலையில் வருகிறேன் என்று கூறியுள்ளார் சாய்பல்லவி.
சென்னை பொண்ணு நம்ம சாய் பல்லவி. பிரேமம் என்ற மலையாளப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் சாய்பல்லவி. இந்த படத்தில் மலர் டீச்சர் என்ற காதாபாத்திரத்தில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களை கவர்ந்தவர். அதனைத்தொடர்ந்து தமிழில் கடந்த 2005ம் ஆண்டு மீரா ஜாஸ்மின், பிரசன்னா நடிப்பில் வெளியான கஸ்தூரி மான் என்ற படத்தில் தமிழில் அறிமுகமாகினார்.

டான்ஸ், நடிப்பு ஆகிய இரண்டிலும் பட்டையைக் கிளப்புபவர் சாய் பல்லவி. அவரது சிரிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார். தற்போது பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சாய்பல்லவி. தமிழில் அவர் கடைசியாக நடித்த கார்கி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இப்போது அவர் சிவகார்த்திகேயனுடன் அமரன், தெலுங்கில் தண்டல், ஹிந்தியில் ஒரு படம் என பிஸியாக நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
டாக்டர், டான்ஸ்சர், நடிகை என சாய்பல்லவி பன்முகம் கொண்டவர், இயல்பாக நடிக்ககூடியவர். அதிகம் மேக்கப் செய்து கொள்ளாமல் இயல்பான தோற்றத்தில் இருப்பதினால், இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளவர். சாய்பல்லவி பெரும்பாலும் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் அதிக மேக்கப் இல்லாமல், சேலை அணிந்து தான் வருவார். நடிகைகள என்றாலே அதிக மேக்கப்புடன் மாடன் டிஸ்சில் தான் வருவார்கள் என்றால், இவர் மட்டும் அதற்கு நேர் எதிராக விதவிதமான சேலையில் தான் வருவார்.

இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு சாய் பல்லவி பேட்டி கொடுக்கையில் ஏன் எப்பவுமே சேலையில் வர்றீங்க என்று கேட்கப்பட்டது. அதற்கு சாய் பல்லவி, இது என்னுடைய கம்ஃபர்ட்டபுள் உடை. அது தான் எனக்கு வசதியாக இருக்கிறது. ஒரு இடத்தில் பேச வேண்டும் என்றால் என்ன பேச வேண்டும் என்று தான் யோசிக்க வேண்டும். உடையை பற்றியெல்லாம் அந்த நேரத்தில் யோசித்துக் கொண்டிருக்கக்கூடாது. அதனால் தான் எனக்கு வசதியாக இருக்கும் புடவையில் நிகழ்ச்சிகளுக்கு வருகிறேன் என்றார்.
துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்
தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்
நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?
தொடக்கம்!
{{comments.comment}}