- ஸ்வர்ணலட்சுமி
உலகின் மிக உயரமான நந்தி எங்க இருக்கு தெரியுமா.. வாங்க பார்க்கலாம்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டத்தில் அமைந்துள்ள வெள்ளாள குண்டம் கிராமத்தில் உலகிலேயே உயரமான நந்தி சிலை மற்றும் ராஜலிங்கேஸ்வரர் சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள நந்தி 45 அடி உயரம் கொண்டது. உலகிலேயே மிக உயரமான நந்தி சிலைகளில் ஒன்றாகும்.
நந்தியின் அகத்தில் சிவன் கோவில் : பிரம்மாண்டமாக அமைந்துள்ள நந்தி சிலையின் வயிற்றுக்குள் ஒரு அழகான சிவன் கோவில் அமைக்கப்பட்டுள்ளது, கோவிலுக்கு மேலும் பெரும் புகழையும், சிறப்பையும் அளிக்கிறது. இக்கோவில் சரியாக எங்கு அமைந்துள்ளது என்பதை பார்ப்போமா...

சேலம் -உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் மேட்டுப்பட்டி சுங்கச்சாவடிக்கு அருகே உள்ள வெள்ளாள குண்டம் கிராமத்தில் இத்துணை பெரிய நந்தி ராஜலிங்கேஸ்வரர் சிவன் கோவில் அமைந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில்,அரியானூரில் அமைந்துள்ள 1008 சிவலிங்க கோவில், எருமாபாளையத்தில் பிரம்மாண்ட ராமானுஜர் கோவில் என பல கோவில்கள் சேலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. மேலும் சேலம் மண்ணுக்கு மற்றொரு வரலாற்று பெருமையாக அமைந்து இருக்கிறது இந்த உலகின் உயரமான நந்தி ராஜலிங்கேஸ்வரர் சிவன் கோவிலும், பிரம்மாண்டமாக 45 அடி உயரமான நந்தி சிலையும் ஆகும்.
வரலாறு: வெள்ளாள குண்டம் பகுதியைச் சேர்ந்த ராஜவேல் என்பவரின் கனவில் இறைவன் வந்து நந்தி சிலை அமைக்க சொன்னதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்த கிராமத்தில் உலகிலேயே உயரமான நந்தி சிலை அமைக்கும் பணிகள் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ராஜவேல் அவர்கள் தனது கிராமத்தில் சிவ பக்தர்களின் உதவியோடும், அனைத்து மக்களின் உதவியோடும் ராஜலிங்கேஸ்வர் சிவன் கோயில் மற்றும் 45 அடி உயரத்தில் பிரமாண்டமான நந்தி சிலை அமைக்கும் பணியை தொடங்கினார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நந்தி சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்றன.மலேசிய நாட்டில் இருக்கும் புகழ்பெற்ற பத்து மலை முருகன் சிலை வடிவமைத்த சிற்பி தியாகராஜன் அவர்களின் குழுவிடம் நந்தி சிலையை அமைக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது.சிற்பி தியாகராஜன் தலைமையில் அவரது குழுவினர் நந்தி சிலையை அமைக்கும் பணியில் ஈடுபட்டு, சிறப்பாக நந்தி சிலை வடிவமைக்கப்பட்டது.
நந்தி கோவில் கும்பாபிஷேகம்:
பிரமாண்டமாக அமைந்துள்ள நந்தி ராஜலிங்கேஸ்வரர் சிவன் கோவில் பணிகள் நிறைவடைந்து, கோவில் கும்பாபிஷேகம் இந்த வருடம் 20 25 பிப்ரவரி இரண்டாம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. தனிச்சிறப்பு :உயரமாக அமைந்துள்ள நந்தி சிலையின் வயிற்றுக்குள் 15 அடி உயர சிவபெருமான் சிலை உள்ளது கோவிலின் தனிச்சிறப்பு ஆகும். பக்தர்கள் நந்தி வயிற்றில் உள்ளே சென்று தரிசிக்கும்படி மலையில் இருந்து தோன்றும் வடிவில் 15 அடி உயர சிவபெருமான்,18 சித்தர்கள்,பைரவர், சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ல் முகூர்த்த கால் நடப்பட்டு 20 25 ஆம் ஆண்டு சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேகம் விழாவில் தீர்த்த குட ஊர்வலம்,பால்குடம் எடுத்தல், தீபஜோதி விளக்கேற்றுதல், விக்னேஸ்வர, நவகிரக, தன்வந்திரி, இரண்டாம் கால யாகம்,லட்சுமி பூஜைகள்,சுதர்சன ஹோமம் நடந்தது. அதனைத் தொடர்ந்து சிவன் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. நந்தி பெருமானுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அபிஷேகம்,அலங்காரம், நெய்வேதியம்,மகாதீப ஆராதனை சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. சேலம் மாவட்டத்திற்கு வரலாற்றுச் சிற்பமாக அமைந்துள்ள இந்த வெள்ளாள குண்டம் நந்தி ராஜலிங்கேஸ்வரர் சிவன் கோவிலை சுற்றுலா செல்பவர்கள் தவறாமல் கண்டுக்களிக்கவும்.
சிவ பக்தர்களுக்கும் சுற்றுலா பிரியர்களுக்கும் இப்பதிவு நன்மை தரும் என நம்புகிறோம். மேலும் வாசகர்கள் அனைவரும் தொடர்ந்து இணைந்திருங்கள். தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}