மும்பை: தியேட்டருக்குள் பட்டாசு வெடிப்பது அபாயகரமானது. படத்தை யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் ரசித்துப் பார்க்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார் நடிகர் சல்மான் கான்.
சல்மான் கான் - கத்ரீனா கைப் நடித்துள்ள படம் டைகர் 3. தீபாவளிப் பண்டிகையையொட்டி இப்படம் திரைக்கு வந்துள்ளது. இந்தப் படத்தை சல்மான் கான் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் ரசிகர்கள் கொஞ்சம் ஓவராகப் போய் தியேட்டருக்குள்ளேயே வெடி வெடித்து அதகளப்படுத்தியுள்ளனர். சம்பந்தப்பட்ட தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. படம் தொடங்கியது முதலே ஆரவாரமாக இருந்தது. அப்போது சில ரசிகர்கள் தியேட்டருக்குள்ளேயே வெடிகளை வெடிக்கத் தொடங்கினர். புஸ்வாணம் விட்டனர். ராக்கெட்டுகளை கொளுத்தினர். அது தாறுமாறாக தியேட்டருக்குள் போய் வெடித்தது.

அந்த இடமே போர்க்களம் போல மாறியது. பயந்து போன ரசிகர்கள் பலர் அந்த இடத்தை விட்டு அலறி அடித்து ஓடினர். மிகப் பெரிய அசம்பாவிதமாக இது மாறியிருக்கும். அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் பிரச்சினை இல்லாமல் முடிந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து சில ரசிகர்களைக் கைது செய்துள்ளனர்.
இதேபோல மாலேகான் பகுதியிலும் ஒரு தியேட்டரில் ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சல்மான் கான் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில், தியேட்டரில் பட்டாசுகள் வெடித்ததாக வந்த செய்தி குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இது அபாயகரமானது. யாருக்கும் தொந்தரவு தராமல் படத்தைப் பார்த்து ரசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் சல்மான் கான்.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}