ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சஸ்பென்ஸ் முடிவடைந்து விட்டது. சாம்பாய் சோரனை ஆட்சியமைக்குமாறு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து இன்று சாம்பாய் சோரன் முதல்வராக பதவியேற்கிறார்.
67 வயதான சாம்பாய் சோரன் முதல் முறையாக முதல்வராக பதவியேற்கிறார். கடந்த ஹேமந்த் சோரன் ஆட்சியின்போது அவர் போக்குவரத்து அமைச்சராாக பதவி வகித்து வந்தார்.
ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையினர் கைது செய்து, அவரும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து கிட்டத்தட்ட 24 மணி நேரம் ஆன நிலையில் நேற்று இரவு ஆளுநர், சாம்பாய் சோரனை ஆட்சியமைக்குமாறு அழைப்பு விடுத்தார்.
முன்னதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி எம்எல்ஏக்கள் அனைவரும் ஹைதராபாத்துக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் வானிலை மோசமாக இருந்ததால் அனைவரும் வீடு திரும்பினர். இந்த நிலையில்தான் தற்போது ஆளுநரின் அழைப்பும் வரவே, ஜேஎமஎம் கூட்டணி மகிழ்ச்சியடைந்துள்ளது.
81 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் ஜேஎம்எம் கூட்டணிதான் தனிப் பெரும் கட்சியாக உள்ளது. இக்கட்சிக்கு 29 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்தக் கூட்டணிக்கு 47 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.
முன்னதாக சாம்பாய் சோரனுக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்கள் அனைவரையும் நிறுத்தி வைத்து அதை வீடியோ எடுத்து அந்த வீடியோவும் வைரலானது. அதில் இடம் பெற்றிருந்த சாம்பாய் சோரன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், ஒன்று, 2, 3 ரோல் கால் போல சொன்னது குறிப்பிடத்தக்கது.
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}