சஸ்பென்ஸ் முடிந்தது.. ஜார்க்கண்ட் முதல்வராக.. முதல்வராக இன்று பதவியேற்கிறார் சாம்பாய் சோரன்!

Feb 02, 2024,09:12 AM IST

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சஸ்பென்ஸ் முடிவடைந்து விட்டது. சாம்பாய் சோரனை ஆட்சியமைக்குமாறு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து இன்று சாம்பாய் சோரன் முதல்வராக பதவியேற்கிறார். 


67 வயதான சாம்பாய் சோரன் முதல் முறையாக முதல்வராக பதவியேற்கிறார். கடந்த ஹேமந்த் சோரன் ஆட்சியின்போது அவர் போக்குவரத்து அமைச்சராாக பதவி வகித்து வந்தார்.


ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையினர் கைது செய்து, அவரும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து கிட்டத்தட்ட 24 மணி நேரம் ஆன நிலையில் நேற்று இரவு ஆளுநர், சாம்பாய் சோரனை ஆட்சியமைக்குமாறு அழைப்பு விடுத்தார்.




முன்னதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி எம்எல்ஏக்கள் அனைவரும் ஹைதராபாத்துக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் வானிலை மோசமாக இருந்ததால் அனைவரும் வீடு திரும்பினர். இந்த நிலையில்தான் தற்போது ஆளுநரின் அழைப்பும் வரவே, ஜேஎமஎம் கூட்டணி மகிழ்ச்சியடைந்துள்ளது.


81 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் ஜேஎம்எம் கூட்டணிதான் தனிப் பெரும் கட்சியாக உள்ளது. இக்கட்சிக்கு 29 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்தக் கூட்டணிக்கு 47 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.


முன்னதாக சாம்பாய் சோரனுக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்கள் அனைவரையும் நிறுத்தி வைத்து அதை வீடியோ எடுத்து அந்த வீடியோவும் வைரலானது. அதில் இடம் பெற்றிருந்த சாம்பாய் சோரன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், ஒன்று, 2, 3 ரோல் கால் போல சொன்னது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்