மும்பை: கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹலை, பிரபல மல்யுத்த வீராங்கனை சங்கீதா பொகத் அப்படியே அலேக்காக தலைக்கு மேல் தூக்கி தட்டாமாலை சுற்றியதைப் பார்த்து சஹல் மிரண்டு போய் விட்டார். இந்த வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் இப்போது ஆத்தாடி சங்கீதாவுக்கு எவ்வளவு பவரு என்று விழி விரிய ஆச்சரியத்தை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.
யுஸ்வேந்திர சஹல் கிரிக்கெட் விளையாடுவது மட்டுமல்ல, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பண்ணுவதிலும் பிரபலமானவர், டான்ஸ் ஆடுவார், பாடுவார், ரீல்ஸ் செய்து கலக்குவார், ஆல் ரவுண்டராக வலம் வருபவர் சஹல். இந்த நிலையில் ஜலக் திக்லா என்ற டிவி ரியாலிட்டி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது அவருடன் மல்யுத்த வீராங்கனை சங்கீதா பொகத்தும் கூடவே வந்தார்.

இருவரும் ஜாலியாக பேசிக் கொண்டு வந்தபோது சஹல் சொன்ன ஒன்றைக் கேட்டு கலகலப்பான சங்கீதா பொகத், சஹலை அப்படியே முதுகு வழியாக அலேக்காக தூக்கி தட்டாமாலை சுற்றினார். இதை எதிர்பார்க்காத சஹல். அய்யோ தலை சுத்துது கீழே இறக்கி விடு விடு என்று கத்தினார். அதன் பிறகுதான் அவர் சஹலை இறக்கி விட்டார்.
சஹலின் மனைவி தனஸ்ரீ வர்மாவும், இந்த ஜலக் திக்லா நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றவர்களில் ஒருவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளியான பிசிசிஐயின் வருடாந்திர வீரர்கள் காண்டிராக்ட் பட்டியலில் சஹல் இடம் பெறவில்லை. இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் ஆகியோரும் கூட பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இதுவும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
சிந்தனைச் சிதறல்.. உணவும் ஓய்வுமே உழைப்பிற்கான ஆற்றல் மூலம்!
tn result 2026 தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
{{comments.comment}}