மும்பை: கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹலை, பிரபல மல்யுத்த வீராங்கனை சங்கீதா பொகத் அப்படியே அலேக்காக தலைக்கு மேல் தூக்கி தட்டாமாலை சுற்றியதைப் பார்த்து சஹல் மிரண்டு போய் விட்டார். இந்த வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் இப்போது ஆத்தாடி சங்கீதாவுக்கு எவ்வளவு பவரு என்று விழி விரிய ஆச்சரியத்தை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.
யுஸ்வேந்திர சஹல் கிரிக்கெட் விளையாடுவது மட்டுமல்ல, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பண்ணுவதிலும் பிரபலமானவர், டான்ஸ் ஆடுவார், பாடுவார், ரீல்ஸ் செய்து கலக்குவார், ஆல் ரவுண்டராக வலம் வருபவர் சஹல். இந்த நிலையில் ஜலக் திக்லா என்ற டிவி ரியாலிட்டி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது அவருடன் மல்யுத்த வீராங்கனை சங்கீதா பொகத்தும் கூடவே வந்தார்.

இருவரும் ஜாலியாக பேசிக் கொண்டு வந்தபோது சஹல் சொன்ன ஒன்றைக் கேட்டு கலகலப்பான சங்கீதா பொகத், சஹலை அப்படியே முதுகு வழியாக அலேக்காக தூக்கி தட்டாமாலை சுற்றினார். இதை எதிர்பார்க்காத சஹல். அய்யோ தலை சுத்துது கீழே இறக்கி விடு விடு என்று கத்தினார். அதன் பிறகுதான் அவர் சஹலை இறக்கி விட்டார்.
சஹலின் மனைவி தனஸ்ரீ வர்மாவும், இந்த ஜலக் திக்லா நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றவர்களில் ஒருவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளியான பிசிசிஐயின் வருடாந்திர வீரர்கள் காண்டிராக்ட் பட்டியலில் சஹல் இடம் பெறவில்லை. இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் ஆகியோரும் கூட பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இதுவும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்
சபாஷ் சரியான போட்டி.. தமிழ்நாடு சட்டசபையில் அனல் பறந்த காரசார விவாதங்கள்
முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் மனைவி சங்கீதா
மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து
Whatsapp Groups: வாட்ஸ்அப் ஃபேமிலி குரூப் அட்டகாசங்கள்.. ஒரு 'நோ எக்சிட்' காமெடி த்ரில்லர்!
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் உடனே FIR: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
வெள்ளிக்கிழமை இரவு.. "நான் தான் கெத்து!".. Weekend புத்துணர்ச்சி கலாட்டாக்கள்!
தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்ட திருத்த முன்வடிவு சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது
{{comments.comment}}