- செ.சாந்தி சின்னத்தம்பி, மதுரை
பாதம் நோக்கியே நடந்தன கால்கள் ...
பிடித்த பாடலை முணுமுணுத்தன உதடுகள் ...
நடை சலிப்பு தெரியாது நட்பின் உறவுகள் ....
இரட்டை ஜடை தொங்கிய பூச்சரம்
தமிழ் மனனப் பாடலை மாறி மாறிவழியில் ஒப்புவித்த தருணங்கள்....
கணித ஃபார்முலாக்களை புரிந்தறிந்த பொழுதுகள்...

வழியில் வரும் பஞ்சு மிட்டாயை வாங்கிச் சுவைத்த கணங்கள் ....
பள்ளிவாசலில் விற்ற தேன் மிட்டாய் இலந்தை வடையும் வாங்கி நின்றகாலங்கள்
பள்ளி மணியோசை கேட்டவுடன் தலை தெறிக்க ஓடிய நேரங்கள்....
யாவுமே மனதிலே மணம் வீசிக் கொண்டே இருக்கிறது காலம் கரைந்தோடினாலும்.....
நினைவுகள் என்றும் எக்காலத்தும் சுகமே ...!
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)
சிந்தனைச் சிதறல்.. உரிமையென உணர்ந்து உணர்வோடு கொண்டாடுவோம்!
அமைதியாய் இருக்கும் புயல்!
பரம ஏழை!
பள்ளிப் பயண வழியில்!
ஐம்பதைத் தாண்டியும் ஆழ் மனதின் ஓரத்தில்!
இயற்கையின் மடியில்!
அபுதாபி செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இலவச நுழைவு விசா
தாய் தரும் அமுதம் (தாய்ப்பால் வாரக் கவிதை)
Short Story: நல்ல மருமகள்!
{{comments.comment}}