சென்னை: என் மனைவி ராதிகாவை கேட்டுத்தான் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைக்கும் முடிவை இறுதி செய்தேன் என்று பாஜகவைச் சேர்ந்த நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
1996ம் ஆண்டு திமுகவில் இணைந்து அரசியலுக்கு வந்தார் சரத்குமார். 1998ல் நடந்த லோக்சபா தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.அதன் பின்னர் 2001ம் ஆண்டு சரத்குமார் ராஜ்யசபா தேர்தலில் நின்று எம்.பி ஆனார். 2006ம் ஆண்டு திமுகவை விட்டு வெளியேறினார் சரத்குமார். பிறகு தனிக்கட்சி ஆரம்பித்தார். 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் தென்காசி, நாங்குநேரி ஆகிய இரு சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்றது அவரது சமத்துவ மக்கள் கட்சி. தென்காசியில் சரத்குமாரும் நாங்குநேரியில் எர்ணாவூர் நாராயணனும் வென்றனர்.
பின்னர் உட்கட்சி பூசல் காரணமாக அமைதியாகவே இருந்து வந்தார் சரத்குமார். நாராயணன் தற்போது சமத்துவ மக்கள் கழகம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தான் தனது அரசியல் கட்சியை மூடி விட்டு, பாஜகவில் இணைந்து விட்டார் சரத்குமார். இதுகுறித்து இன்று அண்ணாமலை புடை சூழ கட்சியினர், செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் சரத்குமார். அப்போது அவர் உருக்கமாக கூறியதாவது:
பாஜகவில் இணைந்தது சமத்துவ மக்கள் கட்சியின் முடிவு அல்ல. மாறாக மக்கள் பணிக்கான தொடக்கம். நாங்கள் மக்கள் பணியில் தொடர்கிறோம். இது நாளைய எழுச்சியாக எடுக்கப்பட்ட முடிவு. நாட்டின் வளர்ச்சிக்காகவும் வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு 2 மணிக்கு இருக்கும், அந்த நேரத்தில் என் மனைவியை எழுப்பி எனக்கு பாஜகவுடன் இணைய தோன்றுகிறது என கூறினேன். அதற்கு அவர் நீங்கள் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் நான் உங்களோடு உறுதுணையாக இருப்பேன் எனக் கூறினார். மனைவியை கேட்ட பின்னர் தான் பாஜகவில் இணைந்துள்ளேன் என்று கூறியுள்ளார் சரத்குமார்.
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
{{comments.comment}}