பெங்களூரு: பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் உடல் இன்று அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் நலடக்கம் செய்யப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்தவர் கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி. இவர் தனது 16 வயது முதல் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். முதலில் கன்னடத்தில் அறிமுகமான இவர், அதன்பின்னர் தமிழ் திரையுலகிற்கு வந்தார். 50 ஆண்டு காலதிரை வாழ்வில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அன்றைய காலகட்டத்தில் சூப்பர் ஸ்டார்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைகளை பெற்றவர்.
அன்றைய கால கட்டத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சரோஜா தேவி. பெங்களூரின் மல்லேஸ்வரத்தில் குடும்பத்துடருடன் வசிந்து வந்த அவர் உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக நேற்று காலை காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், என பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது உடல் இன்று வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அதன்பின்னர், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, அவரது சொந்த ஊரான ராம்நகர், சென்னப்பட்டணாவில் உள்ள தஷாவரா கிராமத்தில் வைக்கப்பட்டது.அதன்பின்னர் அவரது குடும்ப சம்பிரதாயப்படி சடங்குகள் செய்யப்பட்டது. தஷாவரா கிராமத்தில் அவரது உடல் அரசு மரியாதையுடன், துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. சரோஜா தேவிக்கு கண்ணீருடன் பிரியா விடை கொடுத்தனர் உறவினர்கள் மற்றும் ரசிகர்கள்.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}