முதலில் சசிகலாவும், ஓபிஎஸ்ஸும் சேரட்டும்.. எங்க கிட்ட வரத் தேவையில்லை.. ஜெயக்குமார்

Jan 18, 2023,12:41 PM IST
சென்னை: ஓ. பன்னீர் செல்வம் மாதிரியான சுயநலமியைப் பார்க்கவே முடியாது. சசிகலாவுக்கு இபிஎஸ் குறித்துப் பேச தகுதி இல்லை. முதலில் அவர் ஓ.பிஎஸ்ஸிடம் போய்ச் சேரட்டும் என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார்.



அதிமுகவில் மீண்டும் ஒற்றுமையை ஏற்படுத்த பல்வேறு தரப்பிலும் பாஜக முயன்று வருகிறது. அமித் ஷா மூலம் முயன்றார்கள். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மூலம் முயன்றார்கள். எதிலும் பலன் கிடைக்கவில்லை. காரணம், எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ்ஸுடன் இணைவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்த நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநரும் அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பகிரங்கமாகவே அரசியல் பேசியுள்ளார்.

இந்த நிலையில் எடப்பாடி மற்றும் ஓ பன்னீர் செல்வத்தை சந்திக்கப் போவதாக சசிகலா திடீரென அறிவித்துள்ளார். இது அதிமுகவினரிடையே பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதற்கு ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சிறப்பாக பயணித்து வருகிறது.  இந்த நிலையில் சசிகலா இப்படிப் பேசியிருப்பது தேவையற்றது. அவர் யார் இப்படிப் பேச. ஒருங்கிணைப்பதாக இருந்தால் முதலில் தினகரனையும், ஓபிஎஸ்ஸையும் அவர் இணைக்கட்டும். சசிகலாவும் அவர்களுடன் போய் இணைந்து கொள்ளட்டும். அவர்கள் சேர்ந்து தனிக் கட்சி கூட ஆரம்பிக்கலாம்.

சசிகலா ஆயிரம் கருத்து சொல்லலாம், அதையெல்லாம் பொருட்படுத்த முடியாது. எங்களது கட்சி விவகாரத்தில் சசிகலா மூக்கை நுழைக்கக் கூடாது.  ஓ.பன்னீர் செல்வம் மிகப் பெரிய சுயநலவாதி. அவர் சொல்வதையெல்லாம் அதிமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள், மாறாக புறக்கணிப்பார்கள் என்றார் ஜெயக்குமார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்