சென்னை : சசிகலா வெளியிட்டுள்ள புதிய அறிக்கையால் அதிமுகவுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக கட்சியை நிர்வகிக்கும் பொறுப்பு யாருக்கு, கட்சி யாருக்கு, கட்சியின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அரசியல் மோதல்கள், சட்ட போராட்டங்கள் ஆகியவை ஒரு வழியாக ஓய்ந்து, கட்சியின் பொதுச் செயலாளராக, கட்சி நிர்வாகிகளால் தேர்வு செய்யப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக.,வில் இருந்த குழப்பங்கள் பெரும்பாலும் சரி செய்யப்பட்டு விட்டதால், தற்போது கட்சியிலும் மக்களிடம் எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கு உயர்ந்து, 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேலைகளையும் கட்சியின் முழு வீச்சில் துவக்கி உள்ளனர்.
தமிழகத்தில் ஏறக்குறைய 120 க்கும் அதிகமான தொகுதிகளில் தனது சுற்றுப் பயண பிரச்சாரத்தை நிறைவு செய்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அவரின் பிரச்சாரத்திற்கு பிறகு அதிமுக.,வின் ஆதரவு மக்களிடம் அதிகரித்து வருவதாக உளவுத்துறையின் சர்வேக்கள் சொல்கின்றன. இதனால் தேர்தல் வேலைகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். கூட்டணி கட்சியினர் பற்றியோ, மற்ற கட்சி தலைவர்கள் பற்றியோ விமர்சிக்காமல் தேர்தல் வேலைகளை மட்டும் பார்க்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. அது மட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் தனது தொகுதியில் அதிமுக,வின் வெற்றியை உறுதி செய்வதுடன், கூடுதலாக ஒரு தொகுதியை வென்று காட்ட வேண்டும் என்ற ரகசிய அசைன்மென்ட்டையும் மாவட்ட செயலாளர்களுக்கு கொடுத்திருக்கிறாராம் எடப்பாடி பழனிச்சாமி.

இப்படி அதிமுக புயல் வேகத்தில் தேர்தல் களத்தில் தீவிரம் காட்ட துவங்கி உள்ள நிலையில், கடந்த வார இறுதியில் கட்சி தொண்டர்களுக்கு சசிகலா ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். கடிதத்தில் என்னவோ, "பிரிந்திருக்கும் ஒன்று சேர வேண்டும். அதிமுக.,விற்குள் இருக்கும் பிரிவினை மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வழி செய்து விடும். அப்படி நடந்தால் அது தமிழக மக்களுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய அநீதி. அதோடு கட்சியின் இரு பெரும் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு செய்யும் மிகப் பெரிய துரோகம். அதிமுக.,விற்கு பின்னடைவு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக தான் 2021 தேர்தலின் போது நாம் அரசியலில் இருந்து விலகி இருந்தேன். ஆனால் அந்த தேர்தலில் அதிமுக.,வால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இந்த நிலை இனியும் தொடரக் கூடாது. அப்படி நீடித்தால் அது நம்முடைய எதிரி திமுக.,விற்கு பலமாகி விடும்" என கட்சி தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இதில் என்ன தவறு உள்ளது? இதற்கு எதற்காக அதிமுக கலக்கம் அடைய வேண்டும்? என நினைக்கலாம். கடிதத்தில் அவர் குறிப்பிட்ட விஷயங்கள் என்னவோ அதிமுக.,வில் இருந்து விலகியவர்கள், விலக்கப்பட்டவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது தான். அதோடு இந்த தேர்தலில் அதிமுக.,விற்காக தானே களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்ய போவதாகவும் சூசகமாக தெரிவித்துள்ளார். ஆனால் இந்த கடிதத்தில் சசிகலா, தன்னை அதிமுக பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு கடிதத்தை வெளியிட்டுள்ளார். இது தான் அனைவருக்கும் நெருடலை ஏற்படுத்தி உள்ளது.
கட்சி நிர்வாகிகளால் தேர்வு செய்யப்பட்ட பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் போது, சசிகலா எப்படி தன்னை அதிமுக பொதுச் செயலாளர் என குறிப்பிட முடியும்? இதனால் கட்சியை கைப்பற்றி அவர் மீண்டும் முயற்சி செய்ய போகிறாரா? இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஆபத்து வந்து விடுமா? கூட்டணி பேசி முடிவு செய்து, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, தேர்தல் வேலைகளை துவக்கி உள்ள இந்த சமயத்தில் சசிகலா வெளியிட்டுள்ள கடிதம் மீண்டும் அதிமுக.,விற்கு புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்
குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்
அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?
கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
{{comments.comment}}