அமலாக்கத்துறை கைதுக்கு எதிர்ப்பு.. ஹேமந்த் சோரன் மனுவை.. சுப்ரீம் கோர்ட் டிஸ்மிஸ் செய்தது!

Feb 02, 2024,06:18 PM IST
டெல்லி: அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை நாடாமல் இங்கு வந்தது ஏன் என்று ஹேமந்த் சோரனுக்கு கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட், அவரது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு புதிய ஆட்சி அமையவுள்ளது. சாம்பாய் சோரன் தலைமையிலான புதிய அரசு இன்று பதவியேற்கவுள்ளது.

இந்த நிலையில் தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன், டெல்லி உச்சநீதிமநன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார் ஹேமந்த் சோரன்.  இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது, உயர்நீதிமன்றத்தைத்தானே நீங்கள் நாடியிருக்க வேண்டும். அங்கு ஏன் போகவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
]


அதற்கு ஹேமந்த் சோரன் சார்பில் ஆஜரான  வழக்கறிஞர் கபில் சிபல், இது ஒரு முதல்வராக இருந்தவர் தொடர்பான வழக்கு என்று கூறினார். அதைக் கேட்ட நீதிபதிகள், எல்லோருக்கும் சமமானது நீதிமன்றங்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கோர்ட் என்று கிடையாது. உயர்நீதிமன்றமும் அரசியல் சாசனப்படிதான் இயங்குகின்றது என்று கூறிய நீதிபதிகள், உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு கூறி சோரன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதனால் சோரன் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது உயர்நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் சார்பில் மனு செய்யப்படும் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்