டெல்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக இரண்டு வாரத்தில் தேசிய தேர்வு முகமை பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில் நீட் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு ஜூன் 23ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என என்டிஏ அறிவித்துள்ளது.
கடந்த 4 ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. இதன் பின்னர் நீட் தேர்வு எழுதிய 1563 மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை தனியாக கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கியதை கண்டித்து மறு தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை நீட் தேர்வுகள் தொடர்பான விவகாரத்தில் இரண்டு வாரத்தில் என் டி ஏ பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், 6 மையங்களில் நீட் தேர்வு எழுதி கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும். இதன் முடிவுகள் 30ஆம் தேதிக்குள் வெளியிடப்படும். 1563 மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வரும் ஜூன் 23ஆம் தேதி மறுத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பானையை இன்றே வெளியிட உள்ளதாகவும் தேசிய தேர்வு முகாம் அறிவித்துள்ளது.
மேலும் கருணை மதிப்பெண்களை தவிர்த்து 1563 மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் குறித்த தகவல்கள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். ஏற்கனவே நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் விரும்பினால் மறுதேர்வு நடத்த விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}