டெல்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக இரண்டு வாரத்தில் தேசிய தேர்வு முகமை பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில் நீட் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு ஜூன் 23ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என என்டிஏ அறிவித்துள்ளது.
கடந்த 4 ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. இதன் பின்னர் நீட் தேர்வு எழுதிய 1563 மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை தனியாக கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கியதை கண்டித்து மறு தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை நீட் தேர்வுகள் தொடர்பான விவகாரத்தில் இரண்டு வாரத்தில் என் டி ஏ பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், 6 மையங்களில் நீட் தேர்வு எழுதி கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும். இதன் முடிவுகள் 30ஆம் தேதிக்குள் வெளியிடப்படும். 1563 மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வரும் ஜூன் 23ஆம் தேதி மறுத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பானையை இன்றே வெளியிட உள்ளதாகவும் தேசிய தேர்வு முகாம் அறிவித்துள்ளது.
மேலும் கருணை மதிப்பெண்களை தவிர்த்து 1563 மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் குறித்த தகவல்கள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். ஏற்கனவே நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் விரும்பினால் மறுதேர்வு நடத்த விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}