6 பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை..  தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

Apr 23, 2024,02:02 PM IST

சிவகங்கை: சிவகங்கையில் உள்ள பள்ளியில் 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமை ஆரிசியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது கோர்ட்.


சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே பெரிய நரிக்கோட்டை கிராமம் உள்ளது. இந்தப்பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு 62 வயது. இவர் கடந்த 2015ம் ஆம் ஆண்டு பணிபுரிந்து வந்த போது அப்பள்ளியை சேர்ந்த 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவிகள் 6 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.




சிறுமிகள் பயந்து போய் இந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த 6 சிறுமிகளில் ஒருவர் தனது பாட்டியிடம் விசயத்தை கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பாட்டி சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில்  விசாரித்த போலீசார் தலைமையாசிராக இருந்த முருகனை  கைது செய்தனர். அவர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.


இந்த வழக்கில், முருகன் குற்றவாளி என்பது நிரூபணமானது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சரத்ராஜ்  இன்று தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பில் 6 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டணை, ஒவ்வொரு மாணவிக்கும் பாலியல் தொல்லை கொடுத்தற்காக 47 ஆண்டுகள் சிறை தண்டைனயும், ரூ.69 ஆயிரம் அபராதமும்  விதித்து தீர்வு வழங்கினார். தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட 6 மாணவிகளுக்கும் தமிழக அரசு இழப்பீடாக ரூ.29  லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்