சிவகங்கை: சிவகங்கையில் உள்ள பள்ளியில் 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமை ஆரிசியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது கோர்ட்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே பெரிய நரிக்கோட்டை கிராமம் உள்ளது. இந்தப்பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு 62 வயது. இவர் கடந்த 2015ம் ஆம் ஆண்டு பணிபுரிந்து வந்த போது அப்பள்ளியை சேர்ந்த 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவிகள் 6 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
சிறுமிகள் பயந்து போய் இந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த 6 சிறுமிகளில் ஒருவர் தனது பாட்டியிடம் விசயத்தை கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பாட்டி சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் விசாரித்த போலீசார் தலைமையாசிராக இருந்த முருகனை கைது செய்தனர். அவர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில், முருகன் குற்றவாளி என்பது நிரூபணமானது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சரத்ராஜ் இன்று தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பில் 6 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டணை, ஒவ்வொரு மாணவிக்கும் பாலியல் தொல்லை கொடுத்தற்காக 47 ஆண்டுகள் சிறை தண்டைனயும், ரூ.69 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்வு வழங்கினார். தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட 6 மாணவிகளுக்கும் தமிழக அரசு இழப்பீடாக ரூ.29 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}