கன மழை எதிரொலி.. சென்னை உள்பட பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. புதுவையிலும் விடுமுறை அறிவிப்பு

Oct 21, 2025,09:31 PM IST

சென்னை: தொடர் கன மழை எதிரொலியாக சென்னை, கடலூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


வட கிழக்குப் பருவ மழை சூடு பிடித்துள்ளது. நாளை 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும்  விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றுள்ளது.




மறுபக்கம் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் பணிகள் தொடங்கியுள்ளன. சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு , கடலூர் மாவட்டங்களில் பள்ளிகள் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.


இதேபோல புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும், அதற்குட்பட்ட காரைக்கால் மாவட்டத்திற்கும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் பல மாவட்டங்களில் விடுமுறை


தற்போது மேலும் பல மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.  அதேபோல தஞ்சாவூரிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?

news

TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?

news

விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்

news

குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்

news

அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?

news

கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

news

தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு

news

ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்

news

மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்