சென்னை: தொடர் கன மழை எதிரொலியாக சென்னை, கடலூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
வட கிழக்குப் பருவ மழை சூடு பிடித்துள்ளது. நாளை 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றுள்ளது.

மறுபக்கம் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் பணிகள் தொடங்கியுள்ளன. சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு , கடலூர் மாவட்டங்களில் பள்ளிகள் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதேபோல புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும், அதற்குட்பட்ட காரைக்கால் மாவட்டத்திற்கும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல மாவட்டங்களில் விடுமுறை
தற்போது மேலும் பல மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல தஞ்சாவூரிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}