சென்னை: அந்தப் பக்கம் பார்த்தாலும் சோன்னு வெயிலு.. இந்தப் பக்கம் பார்த்தாலும் சோன்னு வெயில.. எந்தப் பக்கம் பார்த்தாலும் வெளுத்தெடுக்குது வெயிலு.. மண்டை காயுதே.. அடடடா என்றுதான் எல்லாரும் புலம்புகிறார்கள். அப்படி வெயில் வெளுத்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில்.
வெயிலு இப்படி அடிச்சா நம்மாளுங்க விடுவாங்களா.. மீம்ஸ் போட்டு காய்ச்சு எடுத்துற மாட்டாங்க.. இப்பத்தான் நாட்டுல என்ன நடந்தாலும் அதை வைத்து வரும் மீம்ஸ்களுக்கு பஞ்சம் என்பதே கிடையாது. தீபாவளி, பொங்கல், மழைக்காலம், சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி, லவ்வர்ஸ்டே உள்ளிட்ட எல்லா நாட்களிலும் மீம்ஸ் வருவது இயல்பாகி விட்டது.
அட ஏங்க அவ்வளவு தூரம் வாடகை சைக்கிளை எடுத்துட்டு போகணும்.. முந்தநாளு பாருங்க, நம்ம சீமான் அண்ணன் பிரஸ்மீட்ல தெரியாத்தனமா எங்க மாமனாருக்கு ரத்தக் கொதிப்புன்னு ஒரு ரிங்டோன் ஒலிச்சிருச்சு.. விடுவாங்களா நம்மாளுங்க.. வச்சு செஞ்சுட்டாங்களா இல்லியா.. எவ்வளவு மீம்ஸு!
எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கிறாங்கனு தெரியாது. ஒக்காந்து ரூம் போட்டு யோசிப்பாய்ங்க போல என்று சொல்லும் அளவிற்கு வித்தியாசம் வித்தியாசமா யோசித்து மீம்ஸ் வந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது வெயில் காலத்தை மட்டும் சும்மா விட்டு வைப்பாங்களா... வெயில் ஒரு பக்கம் காட்டு காட்டுன்னு காட்டிகிட்டு இருக்குறப்ப... இந்த வெயில் கால மீம்ஸ்களும் ஒரு பக்கம் அதன் தாக்கத்தை ஏற்படுத்த தான் செய்து வருகிறது.
வாங்க பாஸ் கொஞ்சம் மீம்ஸ் பார்த்து டென்ஷனைக் குறைக்க முயற்சிப்போம்.
மழையே தேவலாம் போலயே!

வெள்ளைக்காரனே கருப்பாய்டறான்

எங்கப்பா அப்பவே சொல்லிருக்காருண்ணே

மே மாசத்துக்கு அக்னியே வீசும் போலயே

இறங்கி வந்து காட்டு காட்டுன்னு காட்டுதே

நடு வீட்டுல உனக்கு என்னடா வேலை

தாங்க முடியலை பிளீஸ்

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}