தனுஷ்கோடியில் திடீர் கடல் சீற்றம்... போகக் கூடாது.. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு!

Apr 01, 2024,01:01 PM IST

சென்னை:  தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தனுஷ்கோடியில் ஏற்கனவே புயலால் அழிந்த கட்டிடங்கள் இருந்த பகுதிகளில் நேற்று கடல் நீர் புகுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து  ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதே போல நேற்றும் சுற்றுலா பயணிகள் விடுமுறை நாள் என்பதால் அதிகளவில் வருகை தந்திருந்தனர்.




ராமேஸ்வரம் தனுஷ்கோடி தெற்கு பகுதி மன்னர் வளைகுடா கடலில் நேற்று மதியம் 2 மணி முதல் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த சுற்றுலா பயணிகளுக்கிடையே பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் சுற்றுலா பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக அப்பகுதியில் இருந்து வெறியேற்றப்பட்டனர். வழக்கத்தை விட அப்பகுதியில்  நீர்மட்டம் அதிகரித்தது. திடீர் என்று  மாலை 5 மணிக்கு பிறகு எம் ஆர் சத்திரம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து அரிச்சல் முனை வரையிலும் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு கடற்கரை பகுதி முழுமையாக கடல் நீரால் சூழ்ந்தது. 


தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலைகளிலும் கடல் நீர் தேங்கியது. அப்பகுதியில் உள்ள மீனவர்களின் குடிசைகள், ஹோட்டல், கடைகள் என அனைத்து பகுதிகளிலும் கடல் நீர் சூழ்ந்தது.  தனுஷ்கோடி அரிச்சல் முனை கடலில் இருந்து  ராட்சச அலைகளால் தேசிய நெடுஞ்சாலையில் கடல் நீர் கடந்து சென்றது. இதனால் அப்பகுதியில் உள்ள 2 கிலோ மீட்டர் அளவிற்கு தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே கற்கள், கடலில் உள்ள பாசிகள், தாழை செடிகள் குவிந்து காணப்பட்டன.


இந்நிலையில், தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. 5 அடி வரை கடல் அலை எழுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி  அப்பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள்  மட்டும் தனுஷ்கோடி செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்