சென்னை: விஜய் கட்சி சார்பில் நடத்தப்படும் மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் நான் செல்வேன். என் தம்பி சொன்னதையே நான் சொல்றேன். ஐ ஆம் வெயிட்டிங் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை போரூரில் ஈழ இனப்படுகொலை நாளையொட்டி இன எழுச்சி நாள் நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வு நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வாக்கு பெட்டிகள் வைத்திருக்கும் இடங்களில் எங்காவது சிசிடிவி பழுதானால் சரி. ஆனால் பல இடங்களில் ஆகிறது என்றால் அதைப் பற்றி யோசிக்க வேண்டும். கேப்டன் விஜயகாந்த் இருக்கும்போது அவருக்கு பத்மபூஷண் விருது கொடுத்திருக்க வேண்டும். அதற்கு தகுதியான நபர் அவர். கட்சித் தலைவர், நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர்.
சவுக்கு சங்கர் பேசியது தவறு. அதனை மறுக்க முடியாது. பாஜக பத்தாண்டு கால ஆட்சியில் செய்த சாதனைகளை கூறி வாக்கு கேட்க முடியவில்லை. தேர்தல் வரை தமிழ்நாட்டில் சீராக மின்சாரம் கொடுப்பார்கள். ஆனால், தேர்தல் முடிந்தவுடன் துண்டித்து விடுவார்கள். அனைவருக்கும் தெரிந்தது தான் இது.
யார் ஆட்சிக்கு வந்தால் எனக்கு என்ன நடக்கப் போகிறது. அது குறித்து பேசுவது தேவையற்றது. திமுக அரசு சாதித்து இருந்தால் மக்கள் தான் பேச வேண்டும். நீங்கள் சொல்ல வேண்டாம். இது செயல் அரசியலோ அல்லது சேவை அரசியலோ இல்லை. செய்தி அரசியல் தான்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் இருந்து அழைப்பு வந்தால் நான் போவேன். நாட்டின் பிரச்சனையை தீர்க்க அண்ணனும் தம்பியும் சேரக்கூடாது என்பது தானே. விஜயும் நானும் சந்திப்பதில் என்ன பிரச்சனை? என்றார். 2026 விஜய்யுடன் இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு சீமான் கூறுகையில், விஜய் பாணியில் சொல்கிறேன் ஐ ஆம் வெயிட்டிங் என்றார்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}