சென்னை: விஜய் கட்சி சார்பில் நடத்தப்படும் மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் நான் செல்வேன். என் தம்பி சொன்னதையே நான் சொல்றேன். ஐ ஆம் வெயிட்டிங் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை போரூரில் ஈழ இனப்படுகொலை நாளையொட்டி இன எழுச்சி நாள் நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வு நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வாக்கு பெட்டிகள் வைத்திருக்கும் இடங்களில் எங்காவது சிசிடிவி பழுதானால் சரி. ஆனால் பல இடங்களில் ஆகிறது என்றால் அதைப் பற்றி யோசிக்க வேண்டும். கேப்டன் விஜயகாந்த் இருக்கும்போது அவருக்கு பத்மபூஷண் விருது கொடுத்திருக்க வேண்டும். அதற்கு தகுதியான நபர் அவர். கட்சித் தலைவர், நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர்.
சவுக்கு சங்கர் பேசியது தவறு. அதனை மறுக்க முடியாது. பாஜக பத்தாண்டு கால ஆட்சியில் செய்த சாதனைகளை கூறி வாக்கு கேட்க முடியவில்லை. தேர்தல் வரை தமிழ்நாட்டில் சீராக மின்சாரம் கொடுப்பார்கள். ஆனால், தேர்தல் முடிந்தவுடன் துண்டித்து விடுவார்கள். அனைவருக்கும் தெரிந்தது தான் இது.
யார் ஆட்சிக்கு வந்தால் எனக்கு என்ன நடக்கப் போகிறது. அது குறித்து பேசுவது தேவையற்றது. திமுக அரசு சாதித்து இருந்தால் மக்கள் தான் பேச வேண்டும். நீங்கள் சொல்ல வேண்டாம். இது செயல் அரசியலோ அல்லது சேவை அரசியலோ இல்லை. செய்தி அரசியல் தான்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் இருந்து அழைப்பு வந்தால் நான் போவேன். நாட்டின் பிரச்சனையை தீர்க்க அண்ணனும் தம்பியும் சேரக்கூடாது என்பது தானே. விஜயும் நானும் சந்திப்பதில் என்ன பிரச்சனை? என்றார். 2026 விஜய்யுடன் இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு சீமான் கூறுகையில், விஜய் பாணியில் சொல்கிறேன் ஐ ஆம் வெயிட்டிங் என்றார்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}