சென்னை: தங்கச்சி காளியம்மாளை அறிமுகப்படுத்தியதே நான்தான். வேறு ஏதாவது அமைப்பில் அவர் சேர விரும்பினால் அது அவரது முழு உரிமை. போய்ட்டு வாங்க என்று சொல்லி அனுப்பி வைப்போம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக இருப்பவர் காளியம்மாள். சீமானுக்கு அடுத்த இடத்தில் உள்ள முக்கியப் புள்ளிகளில் அவரும் ஒருவர். அவரது பேச்சுக்கும், விவாதத் திறனுக்கும் கட்சிக்குள் மட்டுமல்லாமல், கட்சியையும் தாண்டி நிறைய ரசிகர்கள் உண்டு. அந்த அளவுக்கு சிறப்பாக பேசக் கூடியவர்.
அப்படிப்பட்ட காளியம்மாள் குறித்து சீமான், பிசிறு என்று விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தபோது பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு காளியம்மாள் அமைதியாகி விட்டார். கட்சி சார்ந்த எந்த செயல்பாட்டிலும் அவர் இல்லை. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்குக் கூட அவர் போகவில்லை.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு பகுதியில் நடைபெறவுள்ள ஒரு நிகழ்ச்சியில் அவரது பெயருக்குக் கீழே சமூக செயற்பாட்டாளர் என்ற வாசகம் இடம் பெற்றிருப்பதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியை விட்டு விலகப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேட்டபோது, அது எனக்குத் தெரியாது. கட்சிக்குள் அனைவருக்குமே முடிவெடுக்கும் சுதந்திரம் உள்ளது. விருப்பம் இருந்தால் இருக்கலாம். இல்லாவிட்டால் விலகிக்க உரிமை உண்டு. காளியம்மாள் மட்டுமல்ல, இதோ என் பக்கத்தில் இருக்காரே அவர் கூட நாளைக்கு ஏதாவது இயக்கத்தில் சேர விரும்பினால் சேரலாம். எல்லா சுதந்திரமும் உள்ளது.
என் தங்கச்சியை நான் தான் கூட்டி வந்தேன். நான்தான் அறிமுகப்படுத்தினேன். அவர் வேறு கட்சியிலோ, அமைப்பிலோ சேர விரும்பினால் தாராளமாக அவர் முடிவெடுக்கலாம். எங்க கட்சிக்கு யாராவது வந்தால் வாங்க என்று அழைத்து நன்றி சொல்வோம். போகும்போது போங்க, ரொம்ப ரொம்ப நன்றி என்று சொல்வோம்.
எப்படி இலை உதிர் காலம் என்று ஒன்று இருக்கிறதோ அதுபோல எங்க கட்சிக்கு இப்போது களை உதிர் காலம். எனவே தங்கச்சிக்கு முழு உரிமை உள்ளது. தாராளமாக போகலாம் என்று கூறினார் சீமான்.
அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்
அரசு வேலை மோசடி : திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!
அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி... எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா.. காலியிடம் 7 ஆனது
கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!
ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கான ரூ.2 தள்ளுபடி ரத்து!
ஆனி மாதம் வரும்.. ஜேஷ்ட பெளர்ணமி திதி.. நாளை காலை 6.11 வரை இருக்கு!
விழுப்புரத்தில் நடந்த திருக்குறள் திருவிழா.. சென்னை ஆசிரியை கோ.லதாவுக்கு விருது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவல பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
"சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை" – நற்பணி இயக்கம் விளக்கம்!
{{comments.comment}}