சென்னை: திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் தான் ஆசிரியர்கள் போராடுகின்றன. இது எப்படி குற்றமாகும். இந்த குற்றத்தை செய்ய தூண்டியது யார்?. இந்த வாக்குறுதியை கொடுத்தவர்தான் குற்ற செயலுக்கு காரணம். அவர் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்கள் அவர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்திக்க வந்தார். அப்போது போலீசார் ஆசிர்யர்களை சந்திக்க மறுத்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை சந்திக்க தன்னை அனுமதிக்க கோரி சீமான் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசுகையில், திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் தான் ஆசிரியர்கள் போராடுகின்றன. இது எப்படி குற்றமாகும். இந்த குற்றத்தை செய்ய தூண்டியது யார்?. இந்த வாக்குறுதியை கொடுத்தவர்தான் குற்ற செயலுக்கு காரணம். அவர் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு வீடு தேடி அரசு என்று சொல்லி விளம்பரம் செய்கிறது. எத்தனை ஆயிரம் ரூபாய் கோடிகளை கொட்டி இந்த திராவிட கட்சிகள் ஆட்சி செய்கிறது. அரசியல் தான் செய்யும். சேவை அரசியலோ, செயல் அரசியலோ அவர்களுக்கு தெரியாது. அவர்கள் செய்யவும் மாட்டார்கள்.
இப்பொழுது வீடு தேடி அரசு என்று சொல்கிறார்கள். என் மக்கள் ரோடு தேடி போராடுவதற்கு வருகிறார்கள். அவ்வளவு பிரச்சனை. சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் திமுக அரசு ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறது என்கிறார். இதில் பெருமை ஏதும் இருக்கிறதா? இந்த அரசும், முந்தைய அரசும் மக்களுக்கு ஒரு லட்சம் பிரச்சனைகளை கொடுத்து இருக்கிறது. ஒரு லட்சம் போராட்டங்களை அவர்கள் மீது திணித்து இருக்கிறது. போராடிக் கொண்டு இருப்பவர்கள் வீதியில் நிற்பவர்கள் யார் என்று யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர் -முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... வானிலை மையம் தகவல்!
திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் தான் ஆசிரியர்கள் போராடுகின்றனர்... சீமான் ஆவேசம்!
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு விராட் கோலி விடுத்த வீடியோ அழைப்பே காரணம்.. கர்நாடக அரசு
ஏர் இந்தியா விமானத்தின் எரிபொருள் சப்ளையை கேப்டன்தான் துண்டித்தார்.. அமெரிக்க ஊடகம் தகவல்
ஆகஸ்ட் முதல் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசம்: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு!
காமராஜர்.. உயிருடன் இருந்தபோது தொடங்கியது.. திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்.. அன்புமணி ராமதாஸ்
காமராஜர் குறித்து பரப்பிய கட்டுக்கதைகள்.. ஜோதிமணி வேதனை.. பெரிதுபடுத்தாதீர்கள்.. திருச்சி சிவா!
வயிறு உப்புசமா இருக்கா?.. இதுக்கு இந்த பழக்க வழக்கங்களே காரணமா இருக்கலாம்!
{{comments.comment}}