யாரு பயந்தா.. கருணாநிதி, ஜெயலலிதாவை விட பெரிய தலைவரா?.. விஜய்யை மீண்டும் சீண்டும் சீமான்

Nov 12, 2024,05:25 PM IST

கன்னியாகுமரி:  ஜெயலலிதா, கருணாநிதி அவர்கள் கூட்டாத கூட்டத்தையா விஜய் கூட்டிவிட்டார். அவர்களை விட பெரியவரா.. அப்படீன்னா ஆந்திரா, கேரளாவில் போய் கட்சி ஆரம்பிக்கலாமே.. மக்களுடன் கூட்டணி வைத்துள்ள ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் விஜய் குறித்த கேள்வி இன்றும் எழுந்தது. அவரும் வழக்கம் போல பேச்சில் அனலைக் கக்கினார். சீமான் பேட்டியிலிருந்து

அவரைப் பார்த்து பயந்துட்டேன்னு சொல்றாங்க.. நானா பயந்தேன்..  ஜெயலலிதா, கருணாநிதி இருந்த காலகட்டத்தில் கட்சி தொடங்கியவன் நான். ஜெயலலிதா கருணாநிதியை விட விஜய் பெரிய தலைவரா? அவர்கள் கூட்டாத கூட்டத்தையா விஜய் கூட்டிவிட்டார்.



உங்களுக்குத்தான் எல்லாம் சமம், மொழி பாகுபாடு கிடையாது, இன பாகுபாடு கிடையாதுன்னு சொல்றீங்களே.. பிறகு கட்சிக்கு தமிழக வெற்றிக்கழகம் என விஜய் பெயர் வைத்தது.  உலக வெற்றிக் கழகம் என வைக்க வேண்டியதுதானே. இல்லாட்டி கேரளாவில் ரசிகர்கள் இருக்காங்க, ஆந்திராவில் இருக்காங்க.. அங்கு போய் கட்சி ஆரம்பிக்க வேண்டியதுதானே.

விஜய்யால் எனது வாக்கு வங்கி பாதிக்கும் என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். எனக்காவது வாக்கு வங்கி தான் குறையும், உங்களுக்கு வாக்கே கிடையாது. நான் கார்த்தி சிதம்பரத்தை போட்டிக்கு அழைக்கிறேன். எங்க ரெண்டு பேருக்குமே ஒரு தொகுதிதான். சிவகங்கைதான். ரெண்டு பேரும் போட்டி போடுவோம். ஒரு ரூபாய் கொடுக்காமல் யார் வெற்றி பெறுகிறார் என்பதை பார்ப்போம். 

கூட்டணி கண்டிப்பாக வைக்க கூடாது. நான் தனித்துப் போட்டியிட்டு ஒன்றரை லட்சம் வாக்குகள் பெற்றுள்ளேன். இன்னும் ஓராண்டு தான் இருக்கிறது. 2026 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் நான் யார் என்று தெரியும். என்னை பின்தொடர்கிற என் மக்கள் யார் என்று பாருங்கள்.பொழுதுபோக்கு தளத்தில் தலைவர்களை தேடியவர்கள் அல்ல என்னை விரும்பும் விரும்பிய மக்கள்.

என்னைப் பின் தொடரும் மக்கள் அனைவரும் போராட்ட களத்தில் தலைவரை தேடுபவர்கள். காத்தடிக்கும் திசையெல்லாம் பறக்கிற பதர்கள் எனக்கு வாக்கு செலுத்த மாட்டார்கள். புயலே அடிச்சாலும் நகராத அதே இடத்தில் இருக்கும் தூய நெல் மணிகள் தான் எனக்கு வாக்களிப்பார்கள். எனது கட்சியில் இருந்து பிற கட்சியில் சேர்ந்தவர்கள் எனக் கூறுவோர் அவர்களிடம் உள்ள நாம் தமிழர் கட்சி உறுப்பினர் அட்டையை காட்டவும். 

நாங்கள் Decent Politician இல்லை Deep Politician. மக்களுடன் கூட்டணி வைத்துள்ள ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி. நாங்கள் underground வேலை செய்து வருகிறோம். நான் வேறு எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி தருக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

news

காஞ்சிபுரம் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார்: புஸ்ஸி ஆனந்த்!

news

திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைத்தது காங்கிரஸ்

news

மரபுக்கவிதை புதுக்கவிதையிலும் சிறந்து விளங்கியவர்..தமிழன்பன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்

news

திமுக ஆட்சியில் பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பல்லிளிக்கும் பெண்களின் பாதுகாப்பு: நயினார் நாகேந்திரன்!

news

திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை: எடப்பாடி பழனிச்சாமி

news

தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவு... துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று: அன்புமணி

news

ஜனநாயகன் விஜய்.. ஓவர் டூ மலேசியா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. டிசம்பர் 27ல் சரவெடி!

அதிகம் பார்க்கும் செய்திகள்