செந்தில் பாலாஜி செய்தது தியாகம் என்றால், நாட்டுக்காக சிறை சென்றவர்களை எதில் சேர்ப்பது.. சீமான்

Sep 26, 2024,08:12 PM IST

சென்னை: செந்தில் பாலாஜி செய்தது தியாகம் என்றால், நாட்டுக்காக சிறை சென்றவர்களை எதில் சேர்ப்பது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுள்ளார்.

 

சென்னையில், இன்று சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:


நமது நாட்டில் எதுதான் பரபரப்பு இல்லை. லட்டு பரபரப்பு. ஜிலேபி பரபரப்பு. பஞ்சாமிர்தம் பரபரப்பு. ஜாமீன் கிடைப்பது பரபரப்பு. இன்று பரபரப்புக்கு பஞ்சமே இல்லை.




திருடுவது, கமிஷன் வாங்குவது, லஞ்சம் பெறுவது, டாஸ்மாக் சரக்கை கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்வது, பத்து ரூபாயை கூட்டி விற்பது, நேரம் காலம் இல்லாமல் விற்பனை செய்வது, கள்ளச் சரக்கு ஓட்டுவது இவையெல்லாம் தியாகத்தில் வருகிறது. எனவேதான் அவருடைய தியாகத்தை போற்றியுள்ளார். நாட்டின் விடுதலைக்காக, சிறையில் செக்கிழுத்தவர்கள் 9,10 ஆண்டுகளாக சிறையில் செத்து மடிந்து தூக்கில் தொங்கியவர்கள் நினைத்துதான் எனக்கு கோபம் வருகிறது. 


செந்தில் பாலாஜி பிணையில் வந்ததற்கு பெயர் தியாகம் என்றால், நம் முன்னோர்கள் செய்ததற்கு பெயர் என்ன.  இந்த நாட்டில் மணல் அள்ளி விற்பது, மலையை குடைந்து விற்பது, சாராயம் காய்ச்சுவது எல்லாம் தியாகத்தில் வருகிறது. வீர தீர செயல்களில் பெருமைமிக்க செயல்களில் இவை எல்லாம் வருகிறது. இந்த வழக்கை போட்டது யார். திமுக தொடர்ந்த வழக்கில் தான் செந்தில் பாலாஜி சிறை சென்று வந்துள்ளார். எனவே அவரை சிறைக்கு அனுப்பியவர்களும் திமுக தான். இப்போது ஜாமீனில் வரும்போது வருக வருக வீர தியாக செயல் என்று கூறுவதும் திமுக தான். 


திமுகவில் இருந்தால் தியாகம். அடுத்த கட்சியில் இருந்தால் அது ஊழல் குற்றச்சாட்டாகிவிடும். அவர் அமைச்சராக எந்த தடையும் இல்லை என்பதால், திமுக அவரை மீண்டும் அமைச்சராக்குவார்கள். யார் அதிகமாக வசூலித்து கப்பம் கட்டுகிறார்களோ அவர் தான் நல்ல அமைச்சர் அவ்வளவுதான் என்று கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

news

பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்