சென்னை: செந்தில் பாலாஜி செய்தது தியாகம் என்றால், நாட்டுக்காக சிறை சென்றவர்களை எதில் சேர்ப்பது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுள்ளார்.
சென்னையில், இன்று சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:
நமது நாட்டில் எதுதான் பரபரப்பு இல்லை. லட்டு பரபரப்பு. ஜிலேபி பரபரப்பு. பஞ்சாமிர்தம் பரபரப்பு. ஜாமீன் கிடைப்பது பரபரப்பு. இன்று பரபரப்புக்கு பஞ்சமே இல்லை.

திருடுவது, கமிஷன் வாங்குவது, லஞ்சம் பெறுவது, டாஸ்மாக் சரக்கை கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்வது, பத்து ரூபாயை கூட்டி விற்பது, நேரம் காலம் இல்லாமல் விற்பனை செய்வது, கள்ளச் சரக்கு ஓட்டுவது இவையெல்லாம் தியாகத்தில் வருகிறது. எனவேதான் அவருடைய தியாகத்தை போற்றியுள்ளார். நாட்டின் விடுதலைக்காக, சிறையில் செக்கிழுத்தவர்கள் 9,10 ஆண்டுகளாக சிறையில் செத்து மடிந்து தூக்கில் தொங்கியவர்கள் நினைத்துதான் எனக்கு கோபம் வருகிறது.
செந்தில் பாலாஜி பிணையில் வந்ததற்கு பெயர் தியாகம் என்றால், நம் முன்னோர்கள் செய்ததற்கு பெயர் என்ன. இந்த நாட்டில் மணல் அள்ளி விற்பது, மலையை குடைந்து விற்பது, சாராயம் காய்ச்சுவது எல்லாம் தியாகத்தில் வருகிறது. வீர தீர செயல்களில் பெருமைமிக்க செயல்களில் இவை எல்லாம் வருகிறது. இந்த வழக்கை போட்டது யார். திமுக தொடர்ந்த வழக்கில் தான் செந்தில் பாலாஜி சிறை சென்று வந்துள்ளார். எனவே அவரை சிறைக்கு அனுப்பியவர்களும் திமுக தான். இப்போது ஜாமீனில் வரும்போது வருக வருக வீர தியாக செயல் என்று கூறுவதும் திமுக தான்.
திமுகவில் இருந்தால் தியாகம். அடுத்த கட்சியில் இருந்தால் அது ஊழல் குற்றச்சாட்டாகிவிடும். அவர் அமைச்சராக எந்த தடையும் இல்லை என்பதால், திமுக அவரை மீண்டும் அமைச்சராக்குவார்கள். யார் அதிகமாக வசூலித்து கப்பம் கட்டுகிறார்களோ அவர் தான் நல்ல அமைச்சர் அவ்வளவுதான் என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}