சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தது செல்லும் என்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பளித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை சென்னை அரசினர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் ஹைகோர்ட் உத்தரவின்படி அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், மாறுபட்ட தீர்ப்பை அளித்தது. இதையடுத்து 3வது நீதிபதி விசாரணைக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நீதிபதி சி.வி. கார்த்திகேயன் வழக்கை விசாரித்தார். விசாரணைக்குப் பின்னர் இன்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பை அளித்தார்.
இந்த தீர்ப்பின்போது, 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சில் இடம் பெற்றிருந்த நீதிபதி பரத சக்கரவர்த்தி அளித்த தீர்ப்புடன் தான் ஒத்துப் போவதாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தெரிவித்தார். அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜியைக் கைது செய்தது செல்லும். அவரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரிக்கலாம். விசாரணைக்கு கைது செய்யப்பட்டவர் தடை கோர முடியாது. மாறாக, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாங்கள் நிரபராதிகள் என்பதை நிரூபிக்க சட்டத்தில் பல வழிகள் உண்டு. அதை அவர்கள் செய்ய வேண்டும். மாறாக விசாரணையே கூடாது என்று கூற முடியாது என்றும் நீதிபதி கார்த்திகேயன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பு காரணமாக செந்தில் பாலாஜி தரப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}