திடீர் நெஞ்சுவலி:  செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி

Oct 09, 2023,11:07 AM IST

சென்னை:  திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி அவரது வீட்டில் சோதனை செய்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஜூன் 21 ம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.




டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த செந்தில் பாலாஜி உடல்நிலை சீரானதும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜி சிறை டாக்டர்களின் கண்காணிப்பிலேயே தனி அறையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்கள் அவ்வப்போது பரிசோதித்து வந்தனர். இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடநிலை பாதிக்கபட்டது. இந்த தகவல் அறிந்த புழல்சிறை காவலர்கள் அவரது நிலையை பார்த்து தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். 


அவரை பரிசோதித்த டாக்டர் செந்தில் பாலாஜிக்கு ரத்த ஓட்டம் சரியில்லாமல் இருப்பதை கண்டுபிடித்தனர். ரத்த ஓட்டம் சரியாவதற்கான சிகிச்சைகளை டாக்டர் தற்பொழுது அளித்து வருகின்றனர். அனைத்து பரிசோதனைகளும் முடிவடைந்த பின்னரே இவரை புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது. 


செந்தில் பாலாஜி மீது இருக்கும் வழக்கை  எம்.பி மற்றும் எம்.எல்.ஏ. வை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் இவரது வழக்கு  வருகின்ற அக்டோபர் 31ம் தேதி மறுவிசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்