சென்னை: திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி அவரது வீட்டில் சோதனை செய்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஜூன் 21 ம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த செந்தில் பாலாஜி உடல்நிலை சீரானதும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜி சிறை டாக்டர்களின் கண்காணிப்பிலேயே தனி அறையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்கள் அவ்வப்போது பரிசோதித்து வந்தனர். இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடநிலை பாதிக்கபட்டது. இந்த தகவல் அறிந்த புழல்சிறை காவலர்கள் அவரது நிலையை பார்த்து தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
அவரை பரிசோதித்த டாக்டர் செந்தில் பாலாஜிக்கு ரத்த ஓட்டம் சரியில்லாமல் இருப்பதை கண்டுபிடித்தனர். ரத்த ஓட்டம் சரியாவதற்கான சிகிச்சைகளை டாக்டர் தற்பொழுது அளித்து வருகின்றனர். அனைத்து பரிசோதனைகளும் முடிவடைந்த பின்னரே இவரை புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.
செந்தில் பாலாஜி மீது இருக்கும் வழக்கை எம்.பி மற்றும் எம்.எல்.ஏ. வை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் இவரது வழக்கு வருகின்ற அக்டோபர் 31ம் தேதி மறுவிசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
{{comments.comment}}