திடீர் நெஞ்சுவலி:  செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி

Oct 09, 2023,11:07 AM IST

சென்னை:  திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி அவரது வீட்டில் சோதனை செய்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஜூன் 21 ம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.




டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த செந்தில் பாலாஜி உடல்நிலை சீரானதும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜி சிறை டாக்டர்களின் கண்காணிப்பிலேயே தனி அறையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்கள் அவ்வப்போது பரிசோதித்து வந்தனர். இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடநிலை பாதிக்கபட்டது. இந்த தகவல் அறிந்த புழல்சிறை காவலர்கள் அவரது நிலையை பார்த்து தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். 


அவரை பரிசோதித்த டாக்டர் செந்தில் பாலாஜிக்கு ரத்த ஓட்டம் சரியில்லாமல் இருப்பதை கண்டுபிடித்தனர். ரத்த ஓட்டம் சரியாவதற்கான சிகிச்சைகளை டாக்டர் தற்பொழுது அளித்து வருகின்றனர். அனைத்து பரிசோதனைகளும் முடிவடைந்த பின்னரே இவரை புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது. 


செந்தில் பாலாஜி மீது இருக்கும் வழக்கை  எம்.பி மற்றும் எம்.எல்.ஏ. வை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் இவரது வழக்கு  வருகின்ற அக்டோபர் 31ம் தேதி மறுவிசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்