சென்னை: சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை நேற்று வெளுத்து வாங்கிய மழை செப்டம்பர் மாதம் முழுவதும் தினசரி நீடிக்க வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வட தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. மாலைக்கு மேல் பலத்த இடி மின்னலுடன் காற்றுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. ராணிப்பேட்டை முதல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதேபோல இரவிலும் நல்ல மழை இருந்தது.
திருவள்ளூர், விழுப்புரம், வட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் 100 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த மழை இந்த மாதம் முழுவதும் நீடிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் போட்டுள்ள லேட்டஸ்ட் டிவீட்டில், சென்னை மற்றும் வட தமிழ்நாடு முழுவதிலும் செப்டம்பர் மாதம் வரலாறு படைக்கப் போகிறது. இந்த மாதம் முழுவதும் தினசரி அடிப்படையில் மழையை எதிர்பார்க்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று வட தமிழ்நாடு மட்டுமல்லாமல், கடலூர், காவிரி டெல்டா, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெப்பமும், புழுக்கமும் நிலவி வந்த நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம், பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள், கால்வாய் தோண்டும் பணிகள் தொடர்ந்து கொண்டிருப்பதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்று மக்களை சிரமப்படுத்துகிறது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வட கிழக்கு பருவ காலம் வேகமாக நெருங்கி வருவதாலும், இப்போதே மழை பெய்யத் தொடங்கி விட்டதாலும் இதில் அரசு போர்க்கால நடவடிக்கையில் இறங்க வேண்டியது அவசியமாகும்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}