சென்னை: சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை நேற்று வெளுத்து வாங்கிய மழை செப்டம்பர் மாதம் முழுவதும் தினசரி நீடிக்க வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வட தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. மாலைக்கு மேல் பலத்த இடி மின்னலுடன் காற்றுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. ராணிப்பேட்டை முதல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதேபோல இரவிலும் நல்ல மழை இருந்தது.
திருவள்ளூர், விழுப்புரம், வட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் 100 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த மழை இந்த மாதம் முழுவதும் நீடிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் போட்டுள்ள லேட்டஸ்ட் டிவீட்டில், சென்னை மற்றும் வட தமிழ்நாடு முழுவதிலும் செப்டம்பர் மாதம் வரலாறு படைக்கப் போகிறது. இந்த மாதம் முழுவதும் தினசரி அடிப்படையில் மழையை எதிர்பார்க்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று வட தமிழ்நாடு மட்டுமல்லாமல், கடலூர், காவிரி டெல்டா, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெப்பமும், புழுக்கமும் நிலவி வந்த நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம், பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள், கால்வாய் தோண்டும் பணிகள் தொடர்ந்து கொண்டிருப்பதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்று மக்களை சிரமப்படுத்துகிறது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வட கிழக்கு பருவ காலம் வேகமாக நெருங்கி வருவதாலும், இப்போதே மழை பெய்யத் தொடங்கி விட்டதாலும் இதில் அரசு போர்க்கால நடவடிக்கையில் இறங்க வேண்டியது அவசியமாகும்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}