சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் "மதராஸி" படத்தில் முதலில் ஷாருக் கான்தான் நடிப்பதா இருந்ததாம். இதை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூறியுள்ளார்.
முதலில் இந்த கதையை ஷாருக் கானுக்காகத்தான் முருகதாஸ் யோசித்தார். ஆனால், பிறகு அந்தக் கதையில் சிவகார்த்திகேயன் வந்து சேர்ந்தாராம்.
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மதராஸி படம் குறித்து தொடர்ந்து பேட்டிகள் அளித்து வருகிறார். அப்படி ஒரு சானலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஷாருக் கானை மனதில் வைத்து நான் முழு படத்தையும் உருவாக்கவில்லை. ஆனால், ஒரு கதாபாத்திரத்தை பற்றி அவரிடம் சொன்னேன். இது ஏழு அல்லது எட்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது. அவருக்கும் அது பிடித்திருந்தது.

அப்போது என்னிடம் முழு கதையும் இல்லை. வெறும் கதாபாத்திரத்தின் ஐடியா மட்டுமே இருந்தது. அது ஒரு ஐடியா தான். முழு ஸ்கிரிப்ட் இல்லை. மதராஸி படம் பார்த்த பிறகு, நான் என்ன கதாபாத்திரத்தை பற்றி சொன்னேன் என்று உங்களுக்கு புரியும். ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் ஷாருக் கானுடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். ஷாருக் கான் ரொம்ப அன்பாக, உற்சாகமாக பேசினார். நிச்சயமாக நாம் இந்த படத்தை பண்ணலாம் என்றும் சொன்னார். ஆனால், போகப்போக அந்த திட்டம் தள்ளிப்போனது. அது நடக்காமலே போய்விட்டது என்றார் முருகதாஸ்.
இப்படித்தான் மதராஸி படத்தில் ஷாருக் கான் நீங்கி, சிவகார்த்திகேயன் வந்துள்ளார். சரி, ஷாருக் கான் நடிப்பதாக இருந்த பாத்திரம் எதுவாக இருக்கும். படம் வரட்டும் பார்த்து மகிழ்வோம்.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}