மும்பை: இந்திய தேர்தல் ஆணையம் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திரபவார் கட்சிக்கு, கொம்பு இசைக் கருவியை ஊதும் மனிதன் சின்னத்தை தேரத்ல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் செல்வாக்கு மிகுந்த கட்சியாக திகழ்வது தேசியவாத காங்கிரஸ் கட்சி. இந்தக் கட்சியை கடந்த ஆண்டு ஜூலை 2 ந் தேதி அஜித் பவார் தனது ஆதரவு 8 எம்எல்ஏக்களுடன் உடைத்தார். பின்னர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா - பாஜக கூட்டணயில் இணைந்தார். அஜித் பவார் துணை முதல்வராகவும், அவரது ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டது.

அதன் பின்னர் தனது தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்தான் உண்மையான கட்சி, என்று கூறி சின்னம் மற்றும் கட்சி பெயருக்கு உரிமை கோரினார். இதையடுத்து அஜீத் பவாருக்கு எதிராக சரத்பவாரும் களம் குதித்தார். இந்த சண்டை காரணமாக, தேர்தல் ஆணையம் தலையிட்டது. அஜீத் பவார் தலைமையிலானதுதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று கூறி கட்சிப் பெயரையும், தேரத்ல் சின்னத்தையும், அஜீத் பவாருக்கே ஒதுக்கி உத்தரவிட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சரத் பவாருக்கு அவரது கட்சியின் பெயரை தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் என்ற பெயரைப் பயன்படுத்த அனுமதி அளித்தது தேர்தல் ஆணையம். தற்போது அவருக்கு கொம்பூதும் மனிதன் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. வருகிற 27ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 மாநிலங்களவை தொகுதிக்கான தேர்தல் நடக்க உள்ளது. இதில் சரத்பவார் கட்சியும் போட்டியிட தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது கட்சி மறுபடியும் உடையுமா என்ற பரபரப்பான எதிர்பார்ப்பும் இப்போதே கிளம்பி விட்டது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}