மும்பை: இந்திய தேர்தல் ஆணையம் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திரபவார் கட்சிக்கு, கொம்பு இசைக் கருவியை ஊதும் மனிதன் சின்னத்தை தேரத்ல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் செல்வாக்கு மிகுந்த கட்சியாக திகழ்வது தேசியவாத காங்கிரஸ் கட்சி. இந்தக் கட்சியை கடந்த ஆண்டு ஜூலை 2 ந் தேதி அஜித் பவார் தனது ஆதரவு 8 எம்எல்ஏக்களுடன் உடைத்தார். பின்னர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா - பாஜக கூட்டணயில் இணைந்தார். அஜித் பவார் துணை முதல்வராகவும், அவரது ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டது.

அதன் பின்னர் தனது தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்தான் உண்மையான கட்சி, என்று கூறி சின்னம் மற்றும் கட்சி பெயருக்கு உரிமை கோரினார். இதையடுத்து அஜீத் பவாருக்கு எதிராக சரத்பவாரும் களம் குதித்தார். இந்த சண்டை காரணமாக, தேர்தல் ஆணையம் தலையிட்டது. அஜீத் பவார் தலைமையிலானதுதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று கூறி கட்சிப் பெயரையும், தேரத்ல் சின்னத்தையும், அஜீத் பவாருக்கே ஒதுக்கி உத்தரவிட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சரத் பவாருக்கு அவரது கட்சியின் பெயரை தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் என்ற பெயரைப் பயன்படுத்த அனுமதி அளித்தது தேர்தல் ஆணையம். தற்போது அவருக்கு கொம்பூதும் மனிதன் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. வருகிற 27ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 மாநிலங்களவை தொகுதிக்கான தேர்தல் நடக்க உள்ளது. இதில் சரத்பவார் கட்சியும் போட்டியிட தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது கட்சி மறுபடியும் உடையுமா என்ற பரபரப்பான எதிர்பார்ப்பும் இப்போதே கிளம்பி விட்டது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}