"பிரதமர் மோடியின் டிகிரி".. இதெல்லாம் ஒரு பிரச்சினையா.. சேம் சைட் கோலடிக்கும் பவார்!

Apr 10, 2023,10:44 AM IST
மும்பை: நாட்டில் பேச வேண்டிய பிரச்சினைகள் நிறைய உள்ளன.அதை விட்டு விட்டு பிரதமர் மோடியின் பட்டப் படிப்பு உள்ளிட்ட தேவையில்லாத பிரச்சினைகள் குறித்து சில தலைவர்கள் பேசுவது வேதனையாக உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.

சமீப காலமாக பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் சரத் பவார் உள்ளார். கெளதம் அதானியை முழுமையாக ஆதரித்துப் பேசுகிறார். தொழிலதிபர்களை விமர்சிக்கக் கூடாது என்று சொல்கிறார். ராகுல்காந்தி பேச்சு தவறு என்று கூறுகிறார். தொடர்ந்து பவார் பாஜக தரப்புக்கு ஆதரவாக பேசி வருவது  எதிர்க்கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்த நிலையில்  பிரதமர் நரேந்திர மோடியின் டிகிரி குறித்த சர்ச்சை சில காலமாக இருந்து வருகிறது. குறிப்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடியின் பட்டப் படிப்புகுறித்து தொடர்ந்து பேசி வருகிறார். மேலும் சில தலைவர்களும் இதுகுறித்துதொடர்ந்து பேசி வருகின்றனர்.இதுகுறித்து பவார் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து சரத் பவார் கூறுகையில், தலைவர்களின் கல்வித் தகுதி குறித்து பேசி வரும் தலைவர்கள் உண்மையான பிரச்சினைகள் குறித்துப் பேசாமல் நேரத்தை வீணடிக்கின்றனர். இதை விட மிகப் பெரிய பிரச்சினைகளை நாடு சந்தித்து வருகிறது. அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

வேலையில்லாத் திண்டாட்டம், சட்டம் ஒழுங்கு, பணவீக்கம் ஆகியவை குறித்து தலைவர்கள் கவலைப்பட வேண்டும். ஆனால் சின்ன சின்ன பிரச்சினைகளையும், பிரச்சினையே இல்லாதவற்றையும் பற்றித்தான் இவர்கள் அதிகம் கவலைப்படுகிறார்கள், நேரத்தை வீணடிக்கிறார்கள்.

கல்லூரி டிகிரி பற்றிக் கவலைப்படுகிறார்கள். உங்க டிகிரி என்ன.. என்னோட டிகிரி என்ன.. இதெல்லாம் அரசியல் பிரச்சினைகளா.. எத்தனை பிரச்சினைகள் உள்ளன. அதைப் பற்றிப் பேசுங்களேன். மதம், ஜாதி அடிப்படையில் மக்களைப் பிரிக்கிறார்கள். மகாராஷ்டிராவில் பருவம் தவறிய மழையால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதெல்லாம்தான் பிரச்சினைகள். இதைப் பற்றித்தான் நாம் பேச வேண்டும் என்றார் சரத் பவார்.

பவார் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ள பிரச்சினைகளுக்கு எதிராக பேசி வருவது சலசலப்பையும்,  பவார் மனதில் வேறு ஏதேனும் திட்டம் உள்ளதா என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

news

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

அதிகம் பார்க்கும் செய்திகள்